BREAKING NEWS
latest

Kuwait Workers - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Workers செய்திகள், கட்டுரைகள், Kuwait Workers புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, December 18, 2022

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

Image : Kuwait Airport

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் பத்து மாதங்களில் 47,000க்கும் மேற்பட்ட பயண தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை நீதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இத்தனை பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடத்தின் ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான இடைவெளியில் மொத்தம் 47,512 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டினர் மற்றும் குவைத் குடிமக்களும் அடங்குவார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன்(ஜனவரி முதல் அக்டோபர்) ஒப்பிடுகையில் பயணத் தடை விதிக்கப்பட்ட விகிதம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 30,689 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டிருந்தன. குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 46 லட்சம் பேர். இதில் 34 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறி்ப்பிடத்தக்கது.இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவைத் நிறுத்தி வைத்திருந்த குடும்ப விசா வழங்குவதை மீண்டும் துவங்கியது. முதல் இருபது நாட்களில் குடிவரவுத்துறை நாட்டின் அனைத்து கவர்னரேட்டுகளிலும் சேர்த்து 3000 விசாக்களை வழங்கியதாக அதிகாரப்பூர்வ செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

குவைத் உட்பட உலகை உலுக்கிய கோவிட் காலத்திற்குப் பிறகு வெளிநாட்டினருக்கான குடும்ப விசாக்கள் வழங்க தொடங்கினாலும் அத்தகைய விசாக்களுக்கான புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக அது மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலே நிறுத்தி வைக்கப்பட்ட இத்தகைய விசாக்கள் நவம்பர் முதல் வழங்குவது மீண்டும் துவங்கியது. அறிக்கைகளின்படி,முதல் கட்டத்தில் இத்தகைய விசாக்கள் முக்கியமாக ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் இதை பயன்படுத்தி குழந்தைகளை குடும்ப விசாவில் நாட்டிற்கு அழைத்து வரலாம். பெற்றோர் இருவரும் குவைத்தில் இருந்தால் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு குடும்ப விசா வழங்கும் முடிவு நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டது.இத்தகைய விசாக்கள் இடைநிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு தம்பதிகள் தங்களுடைய சிறு குழந்தைகளைக் கூட தங்கள் சொந்த நாட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை விசா பெற்றவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் இருந்து குவைத்தில் வேலை செய்கின்றவர்களாக இருந்தாலும், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இதை பயன்படுத்தியுள்ளனர்.

Kuwait Airport | Travel Banned | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Tuesday, January 19, 2021

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000-ஆக உயர்ந்துள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் வேலை அனுமதி பாத்திரத்தை(Work Permit) புதுப்பித்து நாட்டில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேறவோ உள்துறை அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக அறிவுறுத்தி வருகிறது.

கடந்த டிசம்பர்- 1 முதல் டிசம்பர்-31வரையில் அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு முதலில் அறிவிக்கப்பட்டது, அனால் மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட நபர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு ஜனவரி-31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகளை பெரும்பாலான மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கோவிட் வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குவைத் 35 நாடுகளுக்கான நேரடியாக விமானங்களை நிறுத்தியுள்ளது, இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாக்களை புதுப்பிக்க அல்லது தாயகம் திரும்புவதற்கான காலக்கெடுவை ஜனவரி 31 வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளதை மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் பொதுமன்னிப்பு அறிவித்து 50 நாட்கள் கடந்த நிலையிலும் 2500 வெளிநாட்டவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் கடந்த ஆகஸ்ட் முதல் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறிய சோதனைகள் நடக்காததும்,குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000 உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kuwait Workers | Kuwait amnesty | Indian Workers

Add your comments to Search results for Kuwait Workers

Thursday, July 3, 2025

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் போலி முகவரி உருவாக்கி வசிக்கின்ற எத்தனை பேர் சிக்க போறாங்களோ தெரியலியே கடவுளே.....

Image : கைது செய்யப்பட்ட நபர்கள்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். அரசின் குற்றப் புலனாய்வுத்துறை, சிவில் தகவல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், முகவரிகள் பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களும் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுத்து போலியாக முகவரிகள் பெற காத்திருந்த 7 நபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்தியில் சிக்கிய ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி சிவில் தகவல் ஆணையத்தின் அரசு இணையதள மின்னணு அமைப்பில் நுழைந்து முகவரி பெறவேண்டிய வெளிநாட்டினரான நபர்கள் நேரில் ஆஜராகாமல், சட்டபடி தேவையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கவோ செய்யாமல் போலியான முகவரிகளை உருவாக்கிய குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.

ஒவ்வொரு போலியான வசிப்பு முகவரிக்கும் 120 தினார் வரை கட்டணமாக(லஞ்சமாக) வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குவைத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக பல முகவர்களுடன் இணைந்து இதுபோன்ற 5,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலியான முகவரிகளை அவர் உருவாக்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு இரண்டு தரகர்களையும், போலியான முகவரி பெற அவர்களுக்கு பணம் கொடுத்த ஏழு நபர்களையும் கைது செய்தனர்.

குற்றவாளியான ஊழியர் இப்படி கிடைத்த பணத்தை கொண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக அரசின் பொது வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டன. இவனிடம் போலியாக முகவரி ரெடி பண்ணின எத்தனை பேர் இவன் வாக்குமூலம் அடிப்படையில் சிக்க போறாங்களோ தெரியலியே.... பிடிபட்ட நபர்கள் குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை...போலியாக முகவரியில் யாராவது வசித்து வந்தால் எதுக்கும் இந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்குவது நல்லது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fake Address | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Friday, January 26, 2024

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் புதிய குடும்ப விசா நிபந்தனையில் இருந்து குறிப்பிட்ட சில பிரிவினருக்கு நிபந்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளன

Image credit: குவைத் உள்துறை

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் குடும்ப விசா பெற விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பள வரம்பு 800 தினார்கள் மற்றும், பல்கலைக்கழக பட்டம் போன்ற விதிமுறையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஆக்டிங் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகள் உடைய ஃபஹத் அல் யூசெப் அவர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் என்று குவைத்தின் தினசரி நாளிதழ் இன்று(26/01/24) சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. பின்வரும் பிரிவினருக்கு இந்தத் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  1. அரசுத் துறையில் வேலை செய்கின்ற ஆலோசகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் 
  2. மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் 
  3. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள்
  4. பள்ளி முதல்வர்கள், அவர்களின் பிரதிநிதிகள், கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை துறையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் உட்பட அரசுத்துறையில் வேலை செய்கின்ற ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள் 
  5. நிதி ஆலோசகர்கள் 
  6. பொறியாளர்கள்
  7. இமாம்கள், போதகர்கள், மசூதிகளில் பாங்கு அழைப்பவர்கள், குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்
  8. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வேலை செய்கின்ற நூலகர்கள்
  9. செவிலியர்கள், துணை மருத்துவர்கள், அதே துறையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் வேலை செய்பவர்கள், அத்துடன் சமூக சேவை வேலை செய்கின்ற அமைச்சகத்தின் கீழ் நர்சிங் துறையில் வேலை செய்கின்ற ஊழியர்கள் 
  10. அரசுத் துறையில் வேலை செய்கின்ற சமூகப் பணியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் 
  11. பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் நிருபர்கள்
  12. கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் 
  13. விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் 
  14. கல்லறை தோட்டங்களில் இறந்த உடல்களை பராமரிப்பவர்கள் மற்றும் தகனம் செய்பவர்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Family Visa | Kuwait Visa | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Thursday, July 3, 2025

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 தீ விபத்துகள் ஒருவர் மரணமடைந்தார் 9 பேர் வரையில் காயமடைந்தனர்

Image:தீ விபத்தின் புகைப்படம்

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் உள்ள அல்-குரைன் சந்தையின் முதல் மாடியில் உள்ள ஒரு உணவகத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்தனர். அல்-பைராக் மற்றும் அல்-குரைன் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொது தீயணைப்புப் படை அறிவித்தது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேபோல் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் வரையில் காயமடைந்தனர்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் அதே ஃபர்வானியா பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று(02/07/25) புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மூன்று தீ விபத்துகள் தொடர்பாகவும் விசாரனை தொடங்கியுள்ளது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேநேரம் குவைத்தில் உண்மையான கோடைக்காலம் இன்று(03/07/25) வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான வெயில் அடுத்த 13 நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலை தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும், சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான கோடை காலத்தில் தீ விபத்துக்கு வாய்புகள் அதிகம், எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fire Accident | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Friday, July 4, 2025

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Wednesday, February 7, 2024

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் படகில் தப்பித்த 3 தமிழர்கள் இந்தியா கடலோர காவல்படையிடம் சிக்கினர்

Image : கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியால் கடுமையான துன்புறுத்தலைத் தொடர்ந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 பேர் முதலாளியின் படகுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நேற்று செவ்வாய்கிழமை(06/02/2024) மாலையில் ஆண்டனி, நிதிசோ டிட்டோ மற்றும் விஜய் ஆண்டனி என்ற 3 தமிழர்கள் கேட்வே ஆஃப் இந்தியா அருகே மும்பை காவல்துறையின் ரோந்துக் குழுவிடம் பிடிபட்டனர். இவர்கள் மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தற்போது கொலாபா காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் குவைத்தில் உள்ள முதலாளியின் மீன்பிடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளனர். கடுமையான சித்திரவதை மற்றும் சுரண்டலை எதிர்கொள்ளவே வேறு வழியின்றி உயிரை காப்பாற்ற இப்படி செய்ய வேண்டியதாயிற்று என்றும், முதலாளியின் படகைத் திருடி இந்தியாவுக்குத் தப்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பாஸ்போர்ட்டை முதலாளி தடுத்து வைத்துள்ளார் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். 12 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர். உணவு தீர்ந்து போனதால் சுமார் 4 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். படகில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆனால், கடலோர கண்காணிப்புப் படையின் கண்ணில் படாமல் இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வழி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக தான் இந்தியாவுக்கு வந்து மும்பையில் தீவிரவாத தாக்குதலும் நடத்தினர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fishing Workers | Kuwait Workers | India Gateway

Add your comments to Search results for Kuwait Workers

Saturday, July 5, 2025

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : மரணமடைந்த பக்ருதீன்

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.

இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Workers

Friday, March 5, 2021

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்;இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர்

Image: சமூக ஊடக வீடியோ

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத் மற்றும் குவைத் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்காக நான்கு பங்களாதேஷ் நாட்டினரை கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு 20 தினார் நோட்டுகளை மேலிருந்து கீழே வீசி,அதை மிதந்து ஆபாசமாக நடனமாடும் வீடியோவை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நிலையில் அது வைரலாக பரவியது. தொடர்ந்து ப‌ல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர். தொடர்ந்து அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலிசார் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர். இதையடுத்து குவைத் சட்டத்திற்கு தங்கள் நாட்டின் மக்கள் கட்டுப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளையும், நாட்டில் வாழும் பங்களாதேஷியர்களையும் இதுபோன்ற செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் குவைத்திற்கான பங்களாதேஷ் தூதர் முகமது ஆஷி குஸ்மான் தங்கள் நாட்டின் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரகத்தில் போலியான யூரோ நோட்டுகளை சாலையில் வீசி நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் வீடியோ ஆதாரம் அடிப்படையில் அவரை கைது செய்து திர்ஹம் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது யாரும் மறந்திருக்க வாய்பில்லை.

Kuwait Police | Kuwait Money | Bangladesh Workers

Add your comments to Search results for Kuwait Workers

Monday, January 18, 2021

குவைத்திற்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர 990 தினார்கள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

குவைத்துக்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான கட்டணமாக  990 தினார்களை குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மனிதவளத்திற்கான பொது ஆணையம் இணைந்து நிர்ணயித்துள்ளது. ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் மூலம் கொண்டுவரப்படும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான செலவு 990 தினார்கள் எனவும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக Sponsore அழைத்துவர 390 தினார்கள் செலவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஏஜென்சி அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீட்டுத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது முதலாளியின் வீட்டில் வேலை செய்ய வேண்டும், இல்லையென்றால், ஆட்சேர்ப்பு அலுவலகம் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு மற்றும் வீட்டுப் பணியாளரை திருப்பி அனுப்புவதற்கான செலவை செலுத்த வேண்டும்.  கோவிட் சூழலில், ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து குடிமக்கள் தொடர்ந்து
பல புகார்கள் எழுந்தன.  இந்த முடிவு குடிமக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றும், அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கட்டணம் அதிகமாக இருந்தால் வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு ஹாட்லைன் எண் 135 அல்லது domestic.workers@manpower.gov.kw மூலமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனை, சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செலவுகளை ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் ஏற்க வேண்டும் என்பதால்,இப்படி புதிதாக அழைத்துவரும் தொழிலாளர்களை அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகைக்கு குடிமக்கள்(அரபிகள்) வாங்க முடியாது என்று ஆட்சேர்ப்பு முகவர் தெளிவுபடுத்தியுள்ளது. வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும், கோவிட் சூழ்நிலையில் வர்த்தக அமைச்சின் முடிவை ஏற்க முடியாது என்பது உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலக ஒன்றியத்தின் கருத்தாக உள்ளது.

Kuwait Recruitment | Domestic Workers | New Visa

Add your comments to Search results for Kuwait Workers

Saturday, January 16, 2021

குவைத்தில் புதிதாக வீட்டுத்தொழிலாளர்கள் தேர்வு மீண்டும் நாளை முதல் துவக்குகிறது


குவைத்தில் கொரோனா பிரச்சினை துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான வீட்டுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய வீட்டுத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு தொடங்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் வீட்டுப் பணியாளர்களை வெளிநாடுகளில் இருந்து திருப்பி அழைத்துவர அறிமுகம் செய்துள்ள belsalamah.com  என்ற தானியங்கி தளத்தை அரசாங்கம் தொடங்கியது.  இந்த தளத்தின் மூலம்தான் தொழிலாளர்கள் மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும், இதற்கான ஆட்சேர்ப்பு ஞாயிற்றுக்கிழமை(17/01/21) முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kuwait Starting | Domestic Workers | Interview Tomorrow

Add your comments to Search results for Kuwait Workers

Wednesday, August 21, 2019

குவைத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு 36,4500 பேர் வந்துள்ளனர்; இதில் முதலிடத்தில் இந்தியர்கள் 17,5000 தொழிலாளர்கள் :

குவைத்தில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு 36,4500 பேர் வந்துள்ளனர்; இதில் முதலிடத்தில் இந்தியர்கள் 17,5000 தொழிலாளர்கள் :

குவைத் தொழிலாளர்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  3 லட்சத்தி 64 ஆயிரத்தி 500 வெளிநாட்டினர் புதிதாக வேலைக்காக தொழில்விசா பெற்று வந்துள்ளனர் என்று  அல்-கபாஸ் தினசரி நாளிதழில்  தெரிவித்துள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கட்டுமானத் தொழிலுக்கும்(Construction Workers), பாதுகாப்புக் காவலர்கள்(Security Guards), கனரக உபகரணங்களை இயக்குபவர்கள்(Operators Of Heavy Equipment) மற்றும் லாரி ஓட்டுனர்கள்(Truck Drivers) ஆகிய வேலைக்கு அதிகமானவர்கள் வந்துள்ளனர்.

குவைத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது இந்தியர்கள் 1 லட்சத்தி 75,000 ஆயிரம் பேர், அடுத்த படியாக எகிப்தியர்கள் 80,000 பேர். இதன் பொருள் இந்தியர்களின் விகிதம் எகிப்தியர்களை விட 120 சதவீதம் அதிகமாகும். மறுபுறம், இந்த காலகட்டத்தில் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 12,000 குறைந்து மொத்தம் 80,000-ஐ எட்டியுள்ளது, இதுபோல் இலங்கையர்கள் 8,500 பேரும், ஈரானியர்கள் கிட்டத்தட்ட 4,321 பேர் குறைந்தது 22,600-ஐ எட்டியுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொருளாதார விவகார அமைச்சர் மரியம்-அல்-அகீல் அவர்கள் அல்-கபாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வைக் கையாளுவதற்கு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஒரு வரைவு தயார் செய்து வருகிறது என்றும், தொழிலாளர்கள் தேவை அறிந்து திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துவர குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by : Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Kuwait Workers

Thursday, June 27, 2019

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் அடுத்த வருடம் 2020 முதல் வெளிநாட்டு தொழிலாளர்கள்(நாம்) வேலை மாற்றம்(தொழில் மாற்றம்) பெறுவதற்கு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறையில் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் முதல்கட்டமாக 20 வகையான துறைகளில் வேலை மாற்றம் பெறுவதற்கு இந்த தகுதி தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம்-அல்-அகீல் குவைத் பிரபல பத்திரிக்கை Al-Qabas அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை மேற்கொள் காட்டி குவைத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதகடத்தல்(சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை அழைத்து வருவது) மற்றும் விசா வியாபாரம் ஆகியவற்றை தடுக்க வேண்டியே இந்த புதிய விதிமுறை நடைமுறையில் கொண்டுவருவதற்கு Public Authority for Manpower (PAM) (பொது மனிதவள ஆணையம்) முடிவு செய்துள்ளது. தற்போது தகுதியில்லாத பலருக்கு பல்வேறு துறைகளில் வேலை பெறுவதற்கு 1500 குவைத் தினார் வரையில் பெற்றுக்கொண்டு விசாவை வியாபாரமாக இடை தரகர்கள் மற்றும் போலியான ஏஜென்சிகள் அப்பாவிகளை ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள் என்றும் இதை முற்றிலும் இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றும்,தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக வேலை மாற்றம் பெறுவதற்கு தகுதி தேர்வு எழுதவேண்டிய 20 பிரிவுகள் விபரங்கள் பின்வருமாறு:

1)Car mechanics

2)EAlectricians

3) Security supervisors

4) Safety supervisors

5) Sanitary workers

6) Technical surveyors

7) Aluminum technicians

8) Welders

9) Lathe technicians

10) Advertising agents

11) Sales representatives

12) Irrigation technicians

13) Steel fixers

14) Carpenters

15) Construction carpenters

16) Asphalt laboratory technician

17) Purchasing officers

18) Accountants

19) Librarians

20) Legal counsels மற்றும்

21) Legal clerks  ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளி பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றிதழ்கள் அடிப்படையில்
தன்னுடைய கல்வி தகுதி தொடர்பான மாற்றங்கள் வேலைக்காக மாற்ற வேண்டும் என்றால் தற்போது செய்யும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாயகம் சென்றுவிட்டு,கல்வித் தகுதியின் அடிப்படையில் புதிய விசாவில் குவைத்திற்கு மீண்டும் வேலைக்கு தாராளமாக வரலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்


Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait Workers

Wednesday, April 19, 2023

குவைத்தில் சிவில் ஐடி காலாவதியாகும் முறைக்கு வங்கி கணக்குகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை நேரிட கூடும்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

Image : குவைத் ஏ.டி.எம் மையம்

குவைத்தில் சிவில் ஐடி காலாவதியாகும் முறைக்கு வங்கி கணக்குகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை நேரிட கூடும்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து(Automatically) ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளின் ஒரு பகுதியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் சேவைக்குப் பிந்தைய சலுகைகள், விசா மற்றும் மாஸ்டர் கார்டு சேவைகளும் அடங்கும். உதாரணமாக முன்பு தினசரி பணம் திரும்பப் பெறும் வரம்பு 2000 தினார்களாக இருந்தது, ஆனால் இதுபோன்ற சமயங்களில் அது 500 தினார்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே கடனுக்காக நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு வங்கியில் கடன் பெற ஒப்புதல் பெறப்பட்டாலும், சிவில் ஐடி காலாவதியானால் அவை ரத்து செய்யப்படும். இந்த நடைமுறை வெளிநாட்டவர்களுக்கும், குடிமக்களுக்கும் பொருந்தும். சில வங்கிகளின் சிவில் அடையாள அட்டைகள் காலாவதியான நிலையில் ஏ.டி.எம் கார்டுகளும் தற்காலிகமாக முடக்கப்படும். குடியிருப்பு ஆவணத்தை புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பலர் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர்.

இதன் காரணமாக பலர் வங்கிக் கணக்குகளை ரத்து செய்வது என்ற தீர்வை நம்பியிருக்கிறார்கள். ஆனால் இது குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டினரையே அதிகம் பாதிக்கும், ஏனென்றால் புதிய வங்கி கணக்கைத் திறக்க பல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இவை பெரும்பாலும் கடினமாக இருக்கும். குடியிருப்பு அனுமதி காலாவதியாகும் முன் ஒரு மாதத்திற்கு குறைந்தது 3 முறை டேட்டாவை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Bank | Account Suspended | Workers Accounts

Add your comments to Search results for Kuwait Workers

Wednesday, July 3, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியாதபடி குவைத் தொழிற்துறை அமைச்சகம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும்.இப்படி நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் ஆவணங்கள் அரசு ரத்து செய்துள்ளது.

இதுபோல் குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளர்களின்(Domestic workers) உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை(Sponsor) கருப்புப் பட்டியல் சேர்க்க குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்பு புகார்கள் வருவதால் இந்த புதிய நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர் ஜெனரல் அஹ்மத்-அல்-முசா இதை தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் வழங்காத புகார்கள், துன்புறுத்தல் புகார்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்கள் தினசரி அதிகரிக்கும் நிலையில் இதை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒரே முதலாளிகளின்(Sponsor) பெயரில் 7ழும் 8ட்டும் முறை தொடர்ந்து புகார்கள் வரும் நிலை ஏற்படுகிறது.இப்படிபட்ட முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவது முறையல்ல என்பதால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் புதிய நடவடிக்கைக்கு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி தொடர்ந்து புகார் வரும் முதலாளிகளையும்( Sponsor) மற்றும் தொழிலாளர்களை அழைத்து வரும்  ஏஜென்சிகளையும்(Recruitment Agency)
கருப்புப் பட்டியல் சேர்க்க தொழிலாளர்கள் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.


Reporting by Kuwait tamil pasanga team.








Add your comments to Search results for Kuwait Workers

Saturday, January 6, 2024

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள 4 அப்பாவி தமிழக இளைஞர்களை மீட்க குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Image : கைது செய்யப்பட்ட 5 பேர்

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

இந்தியா,தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த 4 இளைஞர்கள் கடந்த செப்டம்பர்-2023 யில் மீன்பிடி வேலைக்காக குவைத்திற்க்கு வந்துள்ளனர். இந்நிலையில் டிசம்பர்-5,2023 அன்று இவர்களுடன் இன்னொரு எகிப்து நாட்டை சேர்ந்த நபர் உட்பட 5 பேரையும் போதைப்பொருள் வழக்கில் குவைத் கடலோர காவல்படை கைது செய்ததாக கும்ம்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிதாக வேலைக்கு சென்ற இவர்களுக்கு மொழிகூட தெரியாத நிலையில் உடன் உள்ள நபர் சொல்லி வேலைகளை செய்து வந்துள்ளனர் என்றதும், அந்த எகிப்து நபர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது ஈராக்,ஈரான் எல்லையில் இருந்து இதை கடத்தி வந்துள்ளதும், சிக்கிய போது இந்த அப்பாவி தமிழ் இளைஞர்களையும் மாட்டி விட்டதும் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் அந்த நபர் இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. குவைத்திலுள்ள சிலரை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இவருடைய முதலாளியும்(Sponsor) தமிழக நபர்கள் அப்பாவிகள் எனவும், எகிப்து நாட்டவர் தான் ஏதோ செய்துள்ளான் எனவும், இருநாட்டு வெளியுறவுத்துறை மூலம் முயற்சி செய்து, இவர்கள் குற்றவாளி இல்லை என்பதை நிருபித்து மீட்க முயற்சி எடுக்க சொல்லியுள்ளார்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள தமிழர்கள் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. வினோத், சந்துரு, ஷேசு மற்றும் கார்த்திக் என்பதாகும். இதில் ஒருவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. இன்னொரு நபருக்கு 3 தங்கைகள் உள்ளது. மேலும் இது தொடர்பாக குடும்பத்தினர், நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சென்று குடும்பத்தை கரையேற்றுவார்கள் என்று கடன்பட்டு அனுப்பிய நிலையில் இவர்கள் கண்டிப்பாக இப்படி ஒரு தவறையும் செய்ய மாட்டர்கள் எனவும், எப்படியாவது இவைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் குவைத் இந்திய தூதரகம் முயற்சி எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாதாரண ஒரு பிரச்சனை என்றால் சமூக ஆர்வலர்கள், அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலம் எப்படியாவது மீட்க முடியும், போதை பொருள் கடத்தல் போன்ற பயங்கரமான குற்றங்களுக்கு மரணதண்டனை வரையில் வழங்கபடும். எனவே இரு நாட்டு உயர்மட்ட வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும் வரை ஒவ்வொரு வளைகுடா இந்தியர்களும் இதை பகிர்வு செய்து உதவுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Arrested Kuwait | Drug Case

Add your comments to Search results for Kuwait Workers

Tuesday, July 22, 2025

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait+Population | Gulf Workers | Indian People

Add your comments to Search results for Kuwait Workers