BREAKING NEWS
latest

Featured - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Featured News, Articles, Featured Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Saturday, March 2, 2024

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் பொதுமன்னிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

Image : ஷேக் ஃபஹத் அல் யூசுப் அவர்கள்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுப் தெளிவுபடுத்தினார். இதற்காக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதகால அவகாசம் வழங்கப்படும். குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதியை அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக்கவும் அவகாசம் அளிக்கப்படும் என்று குவைத் அரசு செய்தி நிறுவனத்துக்கு சற்றுமுன் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி நாடு திரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் சட்டம் திட்டங்களுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் மீண்டும் குவைத்துக்குத் திரும்பி வருவதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். வாய்ப்பைப் பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் சுமார் 1,30,000 அளவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் கடைசியாக பொதுமன்னிப்பு கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமன்னிப்பு அறிவிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து முதல் முறை இது குறித்து உறுதிப்படுத்தல் அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு எந்த நாளில் தொடங்கி எப்போது முடியும் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களில் எந்த பிரிவுகளில் வழக்குகள் நிலுவையிலுள்ள தொழிலாளிக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தும் உள்ளிட்ட விரிவான விபரங்கள் பொது மன்னிப்பு தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிடும் அறிவிப்பில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Featured

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to Featured

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

குவைத்திற்கு விடுமுறை முடிந்து திரும்பிய நண்பரிடம் இறைச்சி என்ற போர்வையில் கஞ்சா கொடுத்து முயற்சி

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

மாட்டிறைச்சி என்ற போர்வையில் குவைத் திரும்ப இருந்த வெளிநாட்டவரின் பயணப் பொதிகளில் கஞ்சாவை அனுப்ப முயற்சி. மலப்புரம் கொண்டோட்டி ஓமனூரை சேர்ந்த பைசல் என்பவரை ஏமாற்ற முயன்ற 2 பேர் வாழைக்காடு போலீசாரிடம் சிக்கினர்.

குவைத்தில் உள்ள ஹர்ஷாத் என்ற நபர் விடுமுறை முடிந்து திரும்பவிருந்த இவரிடம் மாட்டிறைச்சியை கொடுத்து அனுப்புமாறு கூறினார். மாட்டிறைச்சி போல் பாட்டிலில் இறைச்சியை நிரப்பி அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து வழங்கப்பட்டன. சந்தேகமடைந்த அவர் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது அது கஞ்சா என தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிபுராயா பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷமீம் மற்றும் அவரது உதவியாளர் ஃபீனு ஃபாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

தயவு செய்து விடுமுறை முடித்து அல்லது முதல் முறையாக வெளிநாடுகளுக்கு வரும் போது முடிந்த வரையில் நண்பர்களுக்கு, உறவுகளுக்கு என்று உங்களுக்கு தெரிந்த அல்லது இன்னொரு தெரிந்த நபர் சொன்னார் என்றோ யாரவது எதாவது கொடுத்து அனுப்ப முயன்றால் எதாவது காரணத்தை சொல்லி முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள் அல்லது யார் பொருள் தருகிறர்களோ அவர்கள் முன்னர் வைத்ததே அந்த திறந்தது முற்றிலுமாக பிரித்து சோதனை செய்யுங்கள்.

இந்த நபருக்கு அதிஷ்டம் இருந்தது பிரித்து பார்த்தார் தப்பித்து கொண்டார். இதுபோல் ஏமாற்றப்பட்ட விமான நிலையங்களில் பிடிபட்ட அப்பாவிகள் நூற்றுக்கணக்கான பேர் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக என்ன சொல்ல அவர்களின் தலைவிதி என்று தான் சொல்ல முடியும் எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Gulf Worker | Kuwait Airport | Gulf jail |

Add your comments to Featured

Wednesday, February 7, 2024

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் படகில் தப்பித்த 3 தமிழர்கள் இந்தியா கடலோர காவல்படையிடம் சிக்கினர்

Image : கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியால் கடுமையான துன்புறுத்தலைத் தொடர்ந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 பேர் முதலாளியின் படகுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நேற்று செவ்வாய்கிழமை(06/02/2024) மாலையில் ஆண்டனி, நிதிசோ டிட்டோ மற்றும் விஜய் ஆண்டனி என்ற 3 தமிழர்கள் கேட்வே ஆஃப் இந்தியா அருகே மும்பை காவல்துறையின் ரோந்துக் குழுவிடம் பிடிபட்டனர். இவர்கள் மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தற்போது கொலாபா காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் குவைத்தில் உள்ள முதலாளியின் மீன்பிடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளனர். கடுமையான சித்திரவதை மற்றும் சுரண்டலை எதிர்கொள்ளவே வேறு வழியின்றி உயிரை காப்பாற்ற இப்படி செய்ய வேண்டியதாயிற்று என்றும், முதலாளியின் படகைத் திருடி இந்தியாவுக்குத் தப்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பாஸ்போர்ட்டை முதலாளி தடுத்து வைத்துள்ளார் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். 12 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர். உணவு தீர்ந்து போனதால் சுமார் 4 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். படகில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆனால், கடலோர கண்காணிப்புப் படையின் கண்ணில் படாமல் இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வழி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக தான் இந்தியாவுக்கு வந்து மும்பையில் தீவிரவாத தாக்குதலும் நடத்தினர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fishing Workers | Kuwait Workers | India Gateway

Add your comments to Featured