BREAKING NEWS
latest

Featured - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Featured News, Articles, Featured Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Sunday, December 14, 2025

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் தேசிய தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றன

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

Indian Worker | Bahrain Tvk | Bahrain Vijay

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Featured

Thursday, December 11, 2025

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது

Image : குவைத் நீதிமன்ற வளாகம்

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.

மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

Indian Worker | Killing Wife | Kuwait Court

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Featured

Tuesday, December 9, 2025

பிரபல லுலு குழும தலைவர் யூசுப் அலி அவர்கள் இலங்கை மக்களுக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்

பேரிடர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கான பிரபல லுலு குழும தலைவர் 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : யூசுப் அலி காசோலையினை வழங்கிய காட்சி

பிரபல லுலு குழும தலைவர் யூசுப் அலி அவர்கள் இலங்கை மக்களுக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை(இலங்கை ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்) வழங்கியதற்காக லுலு குழும நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி அவர்களுக்கு அமீரகதற்கான இலங்கை தூதரகம் நன்றியைத் தெரிவித்துள்ளது .

அவருடைய பங்களிப்பு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்தப் பங்களிப்பு லுலு குழுமத்தின் கருணை மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடந்து வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தூதரகம் தெரிவித்துள்ளது.

Srilanka Workers | Yusufali Lulu | Srilanka Flood

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Featured

குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தில் இன்று காலையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Image: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

Indian Workers | Kuwait Accident | Gulf Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Featured