BREAKING NEWS
latest

Worker Death - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Worker Death செய்திகள், கட்டுரைகள், Worker Death புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, July 5, 2025

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : மரணமடைந்த பக்ருதீன்

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.

இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Search results for Worker Death

Wednesday, December 7, 2022

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த வர்கீஸ் கடந்த 8 ஆண்டுகளாக குவைத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்

Image : உயிரிழந்த வர்கீஸ்

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மரணமடைந்தவர் இந்தியா,கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், எலந்தூரை அடுத்த வரியாபுரம் பகுதியை சேர்ந்த மேத்யூ வர்கீஸ்(வயது-48) ஆவார். அவர் குவைத்தின் சபா மருத்துவமனையில் வைத்து இறந்தார். இவருடைய அப்பா பெயர வர்கீஸ், அம்மா பெயர் சோசம்மா வர்கீஸ் என்பது ஆகும்.

இவருக்கு சிபி என்ற மனைவி, சரண் என்ற மகனும்,ஷெல்வி என்ற மகளும் உள்ளனர். உயிரிழந்த மேத்யூ குவைத்திலுள்ள அலி முடலாக் அல் முடேரி ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தில் வெல்டராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருடைய உடலை சட்ட நடவடிக்கைகள் முடித்து தாயகம் அனுப்பும் பணிகளை பிரவாஸி வெல்ஃபேர் அமைப்பின்,பொதுச் சேவை பிரிவான டீம் வெல்ஃபேர் அப்பாசியா தலைமையில் நடைபெற்று வருகின்றன.

Family Man | Indian Death | Indian Worker

Add your comments to Search results for Worker Death