BREAKING NEWS
latest

Article - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Article News, Articles, Article Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Thursday, February 4, 2021

இன்று உலக புற்றுநோய் தினம் ,குவைத் செவிலியர் சிறப்பு கட்டுரை

இன்று உலக புற்றுநோய் தினம்;குவைத் செவிலியர் அவர்கள் வளைகுடா மக்கள் நலன்கருதி வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரை தொகுப்பு

இன்று உலக புற்றுநோய் தினம் ,விழிப்புணர்வு நாள்;குவைத் செவிலியர் சிறப்பு கட்டுரை

இன்று உலக புற்றுநோய் தினம்.பழைய காலங்களில் அரிதாக அறியப்பட்ட புற்றுநோய் இன்று அதிகமானதற்கு காரணம் நம்முடைய உணவுப்பழக்கங்களும்,இயற்கைமாசுபட்டதும்,சிலசமயம் புகைப்பிடித்தல்,மது அருந்துதல்,புகையிலை உபயோகப்படுத்துதல்,பாரம்பரியம் என பலவற்றை கூறினாலும் இவைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறலாமே தவிர இது தான் காரணம் என சரியாக வரையறுத்துக் கூற முடியாது.இப்போதைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாக வேகமாக கண்டுபிடிப்பதன் மூலம் பாதிப்புகளையும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம்... அறிகுறிகள்(CAUTION)

  1. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்,சிறுநீர் பிரச்சனைகள் இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துதல்.
  2. புண் ஆறாமல் இருத்தல்.
  3.  அசாதாரணமான இரத்தப்போக்கு (காயம் இல்லாமலே சிலசமயம் இரத்தம் வருதல்)
  4. கட்டி மார்பகத்திலோ அல்லது உடலின் எதாவது பகுதியிலோ வருதல்.வலி(அ)வலியில்லாத கட்டி.
  5. செரிமானமின்மை.
  6. மச்சம் அல்லது மருவில் மாற்றம் ஏற்படுதல்.
  7. அசாதாரணமான இருமல்(அ)குரலில் மாற்றம் ஏற்படுத்துதல்.

இவைகளில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.பெண்கள் சுயமார்பக பரிசோதனை 35 வயதிற்கு மேல் செய்து கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், புகையிலை,போதை மருந்து பழக்கங்களை தவிர்க்க வேண்டும். மண்பானையில் சமைத்த உணவை உட்கொள்வது நல்லது. சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். விரைவாக கண்டுபிடித்தல் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். பாதியிலேயே வேறு சிகிச்சைக்கு மாறுவதோ அல்லது இடையில் நிறுத்துதலோ கூடாது. நம்முடைய குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சீக்கிரம் கண்டுபிடித்த பலரும் பரவுதலை தடுத்து பல காலம் வாழ்கின்றனர். புற்றுநோய் தடுப்போம். வந்தாலும் விரைவாக கண்டுபிடித்து பலகாலம் வாழ்வோம்.

Article க.நிர்மலா தமிழரசன்( குவைத் செவியர்)

Add your comments to Article

Saturday, January 30, 2021

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சாலைவழி 20 நாட்களில் ஒரு பயணம்;நவம்பர்-14 முதல் துவங்குகிறது

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சாலைவழி 20 நாட்களில் ஒரு பயணம்;நவம்பர்-14 முதல் துவங்கவுள்ள இந்த பயணம் 5 நாடுகள் வழியாக சிங்கப்பூர் சென்றடையும்

Image credit: அவஞ்சர் ஓவர்லேன்ட்

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சாலைவழி 20 நாட்களில் ஒரு பயணம்;நவம்பர்-14 முதல் துவங்குகிறது

சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பினால் 4 மணிநேரத்தில் சிங்கப்பூர் ஷாங்கி சர்வதேச விமான நிலையத்தை எளிதாக அடையலாம். ஆனால் பேருந்து மூலம் இந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் ,இந்நிலையில் ஹரியான மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்சி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையினை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 5 நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு 4500 கிலோமீட்டர் பயணத்தை 20 நாட்களில் வழங்கும் வகையில் வருகின்ற நவம்பர்-14 அன்று முதல் சேவை துவங்கி டிசம்பர்-3 அன்று சிங்கப்பூரை அடையும் விதத்தில் திட்டமிட்டுள்ளது.

து முழுக்க முழுக்க சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளித்து துவங்கவுள்ளதாக டிராவல் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். நமது வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பேருந்தில் இருக்கும். இந்தியாவில் இருந்து கிளம்பும் பேருந்து மியன்மார்,மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் வழியாக சிங்கப்பூரை சென்றடையும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. "அவஞ்சர் ஓவர்லேன்ட்" என்ற இந்த டிராவல் ஏஜென்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலில் வருபவர்களுக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இதே நிறுவனம் 1957 களில் இயக்கத்தில் இருந்த கொல்கத்தா- லண்டன் பேருந்து சேவையினை மீண்டும் துவங்க உள்ளதாகவும்,ஆனால் சற்று மாறுதலாக இந்தமுறை புதிய பேருந்து சேவை டெல்லி இருந்து லண்டனுக்கு துவங்கும் என்று அறிவித்துள்ளது.18 நாடுகள் வழியாக 20,000 கிலோமீட்டர் பயணித்து 70 நாட்களில் லண்டனை சென்றடையும். இதையடுத்து மீண்டும் உலகின் மிக நீண்டதூர பேருந்து சேவையாக, டெல்லியில் இருந்து துவங்கவுள்ள லண்டன் சேவை இருக்கும் என்ற சிறப்பாகும். டெல்லி இருந்து வருகின்ற மே-2 துவங்கி ஜூலை-10 லண்டனை சென்றடையும் விதத்தில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பேருந்து சேவைகளை துவங்குகின்றன இது தொடர்பான முழு விபரங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.

Add your comments to Article

Thursday, January 21, 2021

உணவே மருந்து,வளைகுடா வாழ் மக்களின் உணவு முறையும் மாற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களும்

உணவே மருந்து,வளைகுடா வாழ் மக்களின் உணவு முறையும் மாற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களும்,குவைத் அரசு சுகாதரத்துறை செவிலியரின் அனுபவ பகிர்வு

Image credit: Google Photo

உணவே மருந்து,வளைகுடா வாழ் மக்களின் உணவு முறையும் மாற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களும்

வளைகுடாவில் வசிப்பவர்களின் உடல்நிலையை பாதிக்கும் முக்கிய காரணியே உணவுப் பழக்கவழக்கங்களாகும். சரியான நேரத்திற்கு சாப்பிடாதது,சரிவிகித உணவை சாப்பிடாதது போன்றவை அல்சர் எனப்படும் வயிறு புண்,இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,சிறுநீரகப் பிரச்சனைகள்,கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கின்றது.இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது, அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு தான் இந்த பகிர்வு......

  1. சரியான நேரத்திற்கு சாப்பிடுவது.
  2. காலை உணவை தவிர்த்தல் கூடாது.
  3. துரித வகை உணவுகளை(fast food)தவிர்த்தல் நல்லது.
  4. அசைவ வகை உணவுகளை தினமும் சாப்பிடுவது பெரும்பாலோனர்களின் வழக்கமாக உள்ளது.அதை தவிர்க்க வேண்டும்.
  5. காய்கறிகள் நிறைய உண்ண வேண்டும்.
  6. குப்பூஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது சாலட் மற்றும் மோர் அல்லது பழச்சாறு குடித்தால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.
  7. பொரித்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  8. தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்குள்ளவர்களிடம் குறைவாக உள்ளது,அதை அதிகப்படுத்த வேண்டும்.
  9. கோதுமையில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டும்,மைதா வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  10. முட்டை சுலபமாக செய்யக்கூடிய உணவு என்பதால் அளவுக்கதிகமாக உட் கொள்வது நம் உடலின் பருமனை அதிகரிக்கும்.
  11. முடிந்த வரை வீட்டு உணவுகளை உண்பது நல்லது,தவிர்க்க இயலாத சமயத்தில் மட்டும் கடையில் சாப்பிட வேண்டும்.
  12. இரவு நேரங்களில் 8 மணிக்கே உணவை உட்கொள்வது செரிமானத்திற்கு நல்லது.
  13. பழச்சாறுகளை முடிந்தவரை Fresh Juice ஆக குடிப்பது நல்லது.
  14. Uric acid level சரியான அளவில் இருந்தால் பயிறு வகைகள் அதிகம் சாப்பிடலாம், அதேநேரம் பதப்படுத்தப்பட்ட டின்களில் உள்ள பயிறைத் தவிர்ப்பது நல்லது.
  15. குழம்பு மீன்களை அதிகம் சேர்த்துக் கொள்வது தோல் பளபளப்பாக இருக்க உதவும்.
  16. ஆரஞ்சு,நெல்லிக்காய்,எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  17. இடையிடையே வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கும்,உடல் எடையை குறைக்கவும் உதவும்.
  18. அரிசி உணவுவகைகளை ஒருநாளைக்கு ஒரு நேரம் சாப்பிட வேண்டும்.
  19. உப்பும்,சர்க்கரையும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  20. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்,முடியாவிட்டால் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும்.எல்லோரும் சரியான உணவுப்பழக்கங்களோடு நல்ல ஆரோக்கியத்துடனும் ஆயுளோடும் இருக்க வேண்டும் இந்த வழிமுறைகள் ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கலாம்......

Article Witter: க.நிர்மலா தமிழரசன்( குவைத் அரசு சுகாதரத்துறை செவிலியர்)

Heath Food | Gulf Life | Gulf Heath

Add your comments to Article

Saturday, January 16, 2021

கொரோனா மூலம் பாதிக்கப்படும் ஒருவரின் நுரையீரல் புகைபிடிக்கும் நபரை விட கடுமையான பாதிக்கபடுகிறது


(மருத்துவர் வெளியிட்டுள்ள எக்ஸ்ரே)

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நுரையீரல் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலை விட மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கோவிட்டிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வடுக்கள் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் காணப்படுவதை விட மோசமானதாக உள்ளது என்றார். டெக்சாஸ் பல்கலைக்கழக தொழில்நுட்ப அறிவியல் மையத்தின் உதவி பேராசிரியர் டாக்டர்: பிரிட்டானி கெண்டலின் அவர்கள் எக்ஸ்ரே புகைப்படங்களுடன் இதை விளக்குகிறார்.இதை அவர் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு கோவிட் சிகிச்சை அளித்த மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதற்காக மூன்று எக்ஸ்ரே படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சாதாரணமாக ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு நுரையீரல் இருண்டு இருக்கும் மற்றும் தெளிவாக தெரியும். புகைப்பிடிப்பவரின் நுரையீரல் ஓரளவு வெண்மையானதாக இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் நோயாளியின் நுரையீரலுக்கு கண்ணுக்கு தெரியாதது. கோவிட் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் முன்பு எச்சரித்திருந்தனர். சோர்வு, மூச்சுத் திணறல், படபடப்பு, மூட்டுவலி மற்றும் தசை வலி ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பின்னர், பலரும் ஆலோசனை பெறுவதற்காக மருத்துவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

Heath News | Covid19 Virus | New Update

Add your comments to Article

Friday, January 8, 2021

வளைகுடா உறவுகள்.....மன அழுத்தப் பிரச்சினையில் இருந்து விடுபட சில குறிப்புகள்......

 

(தனிமையில் இருக்காதீர்கள் அதுவே முதல் தவறு)

பாடாத வளைகுடா வானம்பாடிகள்.........

அயல்நாட்டு வாழ்க்கை நம்மைப்பற்றி படரும் கொடி..... அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அவ்வளவு எளிதில் விடுபட இயலாது.வளைகுடா நாடுகளில் வசிக்கும் நபர்களின் தலையாய பிரச்சனையே மன அழுத்தம் தான்.இதனால் தான் பலருக்கு உடல் உபாதை அதிகமாகி இதய பிரச்சனைகளும்,தற்கொலை எண்ணமும் ஏற்பட்டு உயிரிழப்பு வரை கொண்டு செல்கின்றது.பாடாத வானம்பாடிகளாய் மனம் விட்டு பேசாமலேயே வாழ்க்கையை முடித்துகொள்கின்றனர்.

இதற்கு அடிப்படை காரணம்......

வேலைப்பளு,வேலையின்மை,அளவுக்கதிகமான வேலை,பொருளாதார சிக்கல்,வேலை எப்போது போகுமென்ற நிரந்தரம் இல்லாத நிலை போன்றவைகளாகும்.பெரும்பாலோனோர்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசிப்பவர்கள்
இதை எப்படித் தவிர்க்கலாம்:

1.ஊரிலுள்ள குடும்பத்தினர் முடிந்தளவு அளவாக செலவு செய்து சேமியுங்கள். இங்கு வேலை பார்ப்பவர்களின் உண்மையான சம்பளத்தை அறிந்து திட்டமிட்டு செலவிடுங்கள்,மனம் விட்டு பேசுங்கள்,நம்பிக்கையை கொடுங்கள்.

2.இங்கிருந்து பணம் அனுப்புபவர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து மட்டும் அனுப்புங்கள்,வட்டிக்கு வாங்கி அனுப்பாதீ்ர்கள்,தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வாங்கினாலும் குடும்பத்தினரிடம் பகிருங்கள்.

3.உங்களின் உற்ற நண்பனாக பழகுபவரிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள்.அவர் இங்கு(வளைகுடாவில்) வசிப்பவராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

4.உங்கள் அறையில் உங்களுடன் வசிப்பவர்களுடன் நல்ல உறவுமுறையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

5.அளவுக்கதிகமாக நம்புவதும் தவறு,நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல.

6.உங்களின் வரையறைக்கு உட்பட்டு உதவுங்கள்.

7.இங்கும் Loan வாங்கி, ஊரில் Bankலும் Loan வாங்கி அல்லற்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.

8.உங்களின் அறையிலுள்ள நண்பனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால்(தெரிந்தால்) நேரம் செலவு செய்து அவர்களோடு பேசுங்கள்.

9.பிடித்தமான பொழுதுபோக்குகளில் மனதை மாற்றலாம்.

10.தனிமையை தவிர்க்கவும்.போனில் அதிக நேரம் செலவு செய்வதை தவிருங்கள்

11.அளவுக்கு அதிகமான மன அழுத்தம் என்று உணரும்போது நல்ல சைக்காலஜிஸ்டை கண்டு கவுன்சிலிங் பெறுவது நல்லது.

பாடாத வானம்பாடியாய் இல்லாமல் இருப்பதே மனதிற்கும் உடலிற்கும் நல்லது.

எழுத்து வடிவம்(Writter)
க.நிர்மலா தமிழரசன்(செவிலியர்)

Gulf life | Stress Relief | Some tips

Add your comments to Article

Thursday, January 7, 2021

வளைகுடா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து நிரந்தரமாக தாயகம் திரும்ப முடிவு செய்த நபரா நீங்கள் ?? அப்படி என்றால் இதைப் படியுங்கள்......



வளைகுடாவில் வேலைக்கு வந்துள்ள ஒவ்வொரு நபரின் கனவும் வளைகுடா வாழ்க்கையை முடித்து மகிழ்ச்சியாக நிரந்தரமாக குடும்பத்துடன் தன்னுடைய தாய்நாட்டில்,பிறந்த வளர்ந்த ஊரில் வாழ்வதே....நீங்கள் அலாரம் வைக்காமல் படுக்கைக்குச் செல்லலாம், இதமான காலைப்பொழுதில், கயலிகட்டி,உதிக்கும் சூரியனை பார்க்கும் டீ குடிக்கும் அனுபவமே வேறு..... 3 வேளை உணவு..... மகிழ்ச்சியாக தருணங்கள்  என்று கனவு காணாத வெளிநாட்டவர் யாரும் இருக்க மாட்டார். ஆனால் ஏக்கம் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. ஏக்கத்துடன் வீடு போகும் பேருபானலா வெளிநாட்டினர் வாழ்கையில்..... சிறிது நாட்கள் தாண்டும்போது வெறும் ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.....எனவே வெளிநாட்டு வாழ்க்கைக்கு Goodbye சொல்லி வீட்டிற்குச் செல்லவிருக்கும் ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.......

1: தனது சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவர் வேறொரு நாட்டில் வேரூன்ற(வெற்றியடைய) வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வாழ்கையில் பெரும்பாலான மக்கள் வேரூன்றியுள்ளனர்(வெற்றி கண்டுள்ளனர்). ஆனால் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருந்த ஒரு நபருக்கு, தனது தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்று அங்கு வேரூன்றுவது(வெற்றியடைவது) மிகவும் கடினம்.

2: வளைகுடாவில் வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) நாட்டில் உள்ள வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) பெரிய வித்தியாசம் உள்ளது. தாய்நாட்டில் நீங்க பெற்ற அனுபவம் பெரும்பாலும் வளைகுடா நாட்டில் உங்கள் வெற்றிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வளைகுடாவில் நீங்கள் பெற்ற அனுபவம் தாய்நாட்டில் அவ்வளவு சிறப்பாக பலன்தாரது.

3: வளைகுடாவில் வெளிநாட்டவராத நீங்கள் வாழ்க்கையினை தொடங்கும்போது உங்கள் இதயத்தில் இருந்த பயமும்,தயக்கமும், ஆவேசமும் இது எதுவும் தாயகத்தில் பலன்தராது. நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் தைரியத்துடன் தொடங்கப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால்தான் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும் ஒரு வெளிநாட்டவர் ஒருபோதும் நாட்டில் வெற்றியடைவதில்லை. இளமை,வலிமை அனைத்தையும் இழந்த பிறகே பெரும்பாலான நபர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்பதும் ஒரு காரணம்......

4: பொருள்,ஆதாயம் இவை உங்களிடம் இருந்தால் மட்டுமே உறவுகள் உடன் இருக்கம், அது நட்பு அல்லது குடும்ப உறவுகள் யாராக இருந்தாலும் சரி. நம்மிடம் சேமிப்பு இருந்தால் மட்டும், நம் அவர்களுக்கு தேவையான அளாக கருதுவார்கள்.

5: நாம் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். ஆனால் உங்களை நீங்கள் மறந்துவிட வேண்டாம், நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம்முடைய எதிர்காலத்துக்காக ஒரு சிறிய சேமிப்பை ஒதுக்குவதுதான்.

6: கடினமான காலங்களில் யாரும் நமக்கு உதவி செய்யமாட்டார்கள்,அந்த நேரத்தில் நாம்  உதவியவர்களிடமிருந்து வேதனையான, கசப்பான கடினமான அனுபவங்களை மட்டுமே சந்திக்க வேண்டியது இருக்கும்

7: உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அது கரைந்துவிட அதிக நேரம் தேவையில்லை. வருவாய் இல்லாமல் செலவு செய்யும்போது, நாம் பாட்டிலில் உள்ள குச்சியைப் போல இருப்போம்(கண் மை குப்பி),மிகக் குறைவாக செலவு செய்தாலும் மெதுவாக பாட்டில் காலியாகும்,இறுதியில் பாட்டிலும், குச்சி மட்டுமே எஞ்சியிருக்கும். இருக்கின்ற ஒன்னை விட்டுவிட்டால் அதை திரும்பப் பெறுவது மிகவும் கடினம், எனவே உங்களிடம் உள்ளதை விட்டுக்கொடுப்பதற்கு முன் நூறுமுறை சிந்தியுங்கள்.

8: இதனால் சிறிது காலத்தில் நம்முடைய காலியான பாக்கெட் மற்றவர்கள் பார்வையில், நாம் வெறுக்கத்தக்கதாகவும்,தகுதியற்றதாகவும் ஆக்கும். மேலும் எந்த ஐடியாவும் இல்லாத முட்டாள்,தொந்தரவு செய்யும் நபர் இப்படி பட்டியல் நீளும்.....

9: வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்லும் தொண்ணூறு சதவீதம் பேர் திரும்பிச் வளைகுடா செல்ல வழி இருக்கிறதா என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டில் மதிப்பு இல்லை, நண்பர்களும் இல்லை, கையில் பணமும் இல்லை என்பதால், நம்முடைய குடும்பத்தில்
இருப்பவர்களிடம் மனதில்கூட தேவையில்லாத நபராக மாறும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

10: நீங்கள் வளைகுடாவில் இருக்கும்போது, உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த அன்பையும் மரியாதையையும்,வளைகுடாவை விட்டு சென்றால் பெறுகிறீர்களா?  நீங்கள் வளைகுடாவில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும்போது தெரிந்த நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு, வளைகுடா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நல்ல காலங்களில் எதிர்காலத்திற்கு ஏதேனும் வருமானம் சேர்த்து வையுங்கள். உங்களுக்கு ஏதாவது செய்ய தைரியமும் விருப்பமும் இருந்தால் அல்லது ஒரு நிரந்தரமாக வருமானம் இருந்தால் நீங்கள் தைரியத்துடன் தாயகம் திரும்பலாம், உங்களுக்கு நாற்பது வயது ஆவதற்கு முன்பே செல்லுங்கள். வளைகுடாவை விட்டு வெளியேறுபவர்களை உதாசீனப்படுத்தும் பதிவல்ல இது. சில எச்சரிக்கைகள், நிதர்சனமான உண்மைகள் சொல்லும்போது,கேட்கும்போதும் கசப்பாக தெரியலாம்.... ஆனால் இதுதான் உண்மை.......

Gulf Life | Real Story | Tamil Article

Add your comments to Article

Sunday, January 3, 2021

குவைத் பெண்ணுக்கும்,இந்திய இளைஞருக்கும் இடையே மலர்ந்த காதல்;சேர்த்து வைத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா

(அஸ்மி விடுதலை,சென்னை நீதிமன்றம் முன்னர்,2002)

குவைத்தில் 2002-யில் நடந்த இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அமீரக பத்திரிகை Repost செய்து இருந்தது,இது தற்செயலாக கண்ணில்ப்பட்டது. குவைத்தில் இருந்து மார்ச்23,2002 ஒரு காதல் ஜோடி சென்னை(மெட்ராஸ்) விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை,அங்கிருந்து தான் பிரச்சனை துவங்கியது.

குவைத்தில் செல்வ செழிப்பான வீட்டில், அரபிக்கு மகளாக பிறந்தவர் ஃபலக் அல் அஸ்மி(வயது-23), அந்த வீட்டில் ஓட்டுநராக வேலைக்கு வந்த இந்தியர் காதர் பாஷா(வயது-28) ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். தாயை இழந்த அஸ்மியை வெளியே அழைத்துச் செல்வது பாஷாவின் வேலையாக இருந்தது. பயணங்களில் இவர்களில் இடையிலான கலந்துரையாடல் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து பாஷா ஊர் திரும்பிய நேரத்தில் அஸ்மி அவருடன் இந்தியா திரும்புவதில் உறுதியாக இருந்தார். 

அந்த நேரத்தில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை, குவைத்தில் இருந்து போலியான பாஸ்போட் தயார் செய்து  இருவரும் குவைத் விமான நிலையத்தில்  இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். அங்கு அதிகாரிகள் அஸ்மியின் பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அரபு மொழியில் மட்டுமே பதில் அளித்தவண்ணம் காணப்பட்டார். இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில் அஸ்மி குவைத் குடிமகள் என்பதை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து அஸ்மியை கைது செய்த, போலிசார் வேலூர் மத்தியசிறையில் அடைத்தனர். இந்த பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்பட்ட நிலையில் இருநாடுகளின் வெளியுறவு பிரச்சினை என்பதால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அஸ்மியிடம் அதிகாரிகள்(மொழிப் பெயர்ப்பு) மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த காரணத்திற்காகவும் நான் குவைத் திரும்ப மாட்டேன் என்றும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து வெளிநாட்டு பெண்மணி என்பதால் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதா என்பதை அறிய மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் கர்ப்பமாக இருக்கின்ற தகவலும் வெளியானது.

தொடர்ந்து அல்-அஸ்மிக்கு இந்தியாவில் புகலிடம் வழங்கவும், அவருக்கு இந்திய குடியுரிமையை வழங்கவும் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அன்றைய மத்திய உள்துறை மந்திரியாக இருந்த எல்.கே.அத்வானி இருநாட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில் அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்த மாட்டோம் என்று உறுதியளித்தார். இதையடுத்து சென்னை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 

ஏப்பல்-1 ஆம்,2002 தேதி ஆஸ்மி விடுதலை செய்யட்டார். இதையடுத்து ஜெயலலிதா அவர்கள் உத்தரவின் அடிப்படையில் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை வழங்கி தமிழக காவல்துறை பாதுகாப்புடன் சென்னையில் இருந்து, அன்றைய ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 450 கி.மீ தெற்கே உள்ள மைடுகூர் அருகிலுள்ள சித்தப்பள்ளி கிராமத்திற்கு அழைத்து சென்று பாஷாவின் பெற்றோர்களிம் அஸ்மியின் பாதுகாப்பில் உறுதிமொழி வாங்கிவிட்டு பத்திரமாக விட்டுவந்தனர். 

இதையடுத்து அஸ்மி மற்றும் பாஷா திருமணம் செய்து கொண்டதாக அன்றைய ஹைதராபாத்தில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அன்றைய ஆந்திரா அரசு இருவருக்கும் அரசு வேலை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அஸ்மிக்கு அரபு ஆசிரியராகவும், பாஷாவுக்கு தபால் நிலையத்திலும் வேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை(மகன்) குறித்த செய்தியையும் அன்றைய பத்திகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இவர்கள் காதல் காரணமாக அன்றைய காலத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த இந்தியர்கள் பலரும் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடிட்டர்: Arab tamil daily Team

Add your comments to Article

Saturday, July 27, 2019

குவைத்தில் ஓட்டுநராக வந்து,கடந்த 20 ஆண்டுகளில் விடாமுயற்சி மூலம் தமிழன் ஒருவரின் சாதனை:

குவைத்தில் ஓட்டுநராக வந்து,கடந்த 20 ஆண்டுகளில் விடாமுயற்சி மூலம் தமிழன் ஒருவரின் சாதனை நேற்று பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடைபெற்றது:

 


குவைத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையே சேர்ந்தவர் ஹைதர் அலி என்ற சாதாரண மனிதர் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு வந்தார். அதுவும் தனது நண்பர் ஒருவர் மூலம் சாதாரண வீட்டு டிரைவராக பணியாற்ற குவைத் நாட்டிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் பல மணி நேரம் கஷ்டப்பட்டு பணிகள் தொடந்த வேளையில், ஏதேனும் சொந்த தொழிலில் இறங்க வேண்டும் என உறுதி எடுக்கிறார் அவர்.


அந்த நேரத்தில் உதித்தது எண்ணம் தான் கார்கோ தொழில்,ஒவ்வொரு மக்களையும் சந்தித்து தான் கார்கோ அனுப்புவதாக சொல்கிறார்,இப்படியாக படிப்படியான முன்னேற்றம். அதுவும் சும்மா எல்லாம் கிடையாது இடையில் இடையில் தொழில் போட்டியால் பல்வேறு பிரச்சனைகள்,இவை அனைத்தையும் கடினமாக சந்தித்து, இன்று குவைத் மட்டுமல்ல கத்தார்,சவுதி,துபாய் மற்றும் மலேசியா என சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளை நிறுவனத்தை துவங்கி உள்ளார்.

சிறுக சிறுக இன்று ஆலமரம் போல் தழைத்து அனைவருக்கும் உதவிடும்
அந்த நிறுவனம் தான் TVS கார்கோ நிறுவனம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதையடுத்து அடுத்து டிராவல்ஸ் துறையில் அடியெடுத்து வைத்தார். அதுவும் குவைத்தில் நம்பர் ஒன் நிறுவனம் என பெயரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து இன்று தொழிலதிபராக வெற்றிபெற்ற அவருக்கு, துபாயில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் டாக்டர் பட்டம் கொடுத்தது கவுரவித்து. குவைத்தில் செயல்படும் ஒட்டுமொத்த இந்தியா,இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளின் அமைப்புகளுக்கு உதவுவதில் கொடைவள்ளலாக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமல்ல ஊரில் பல்வேறு சமூக மனித நேயப் பணிகளையும் TVS அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார்.


இவரின் இவ்வளவு உச்சாணிக்கு பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அவரின் தன்னம்பிக்கை தான் காரணம் என்றாலும்,அவரின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் ஒரு காரணமாகும். தனது வளர்ச்சிக்கு விசுவாசமாக இருக்கும் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் பணிகளை பாராட்டி ஊக்க தொகை வழங்கி வருகிறார்.


இந்நிலையில் ஏதேனும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலையில்(25.07.2019) அன்று 20 ஆண்டுக்கான மாபெரும் தொழிலாளர்களின் திருவிழாவை குவைத்தில் நடத்தினார் டாக்டர் S.M.ஹைதர் அலி அவர்கள். தனது TVS கார்கோ நிறுவனத்தில் அதிக வருடம் பணியாற்றி வரும் நான்கு தொழிலாளர்களுக்கு தலா 5 இலட்சத்திற்கான காசோலைகளை அவர்கள் வழங்கினார்

இந்த நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி டிவிஎஸ் கார்கோ மேலாளராக பணிபுரியும் ஆரிப் அவர்களுக்கு டிவிஎஸ் குழுமத்தின் கார்கோ வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த அவரை பெருமைபடுத்தும் விதமாய் 2019  மாடல் பார்ச்சூனர் காரை பரிசளித்துள்ளார் அலி அவர்கள், மேலும் சுமார் 150 கற்கும் மேற்பட்ட சக ஊழியர்கள் அனைவரும் பெருமதிப்பிலான தங்க நாணயங்களை டிவிஎஸ் குழுமத்தின் சேர்மன் ஹைதர் அலி அவர்கள் பரிசாக வழங்கினார். இறுதியில் டிவிஎஸ் நிறுவனம்  தயாரித்த முகில் கிரியேஷன்ஸ் சார்பாக இயக்குனர் ஆர்.ரஷித் அவர்களால் உருவான "பஞ்ச கவிஞன்" என்ற குறும்படத்தை அலி அவர்கள் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை திரு.கங்கை கோபால் மற்றும் திரு.வெங்கட் மதி ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்

நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மற்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள்,பத்திரிக்கியாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். வருகைதந்த  அனைவருக்கும் இரவு உணவு வழங்கி அலி அவர்கள் சிறப்பாக உபசரிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வீட்டு வேலைக்கு வந்தவர் இன்று பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி தொழிலதிபர் ஆனது நிச்சயம் ஒரு பிரம்மிப்பு தான்.

Editor: ktpnews Official 




Add your comments to Article