BREAKING NEWS
latest

Tamil Worker - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Tamil Worker செய்திகள், கட்டுரைகள், Tamil Worker புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, July 6, 2025

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

Image : புகைப்படம் உயிரிழந்த சசி அவர்கள்

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சசி(52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சசி கடந்த 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக சவுதியில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சசி சில வருடங்கள் ஊரில் இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சசி உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சி இருந்ததாலும், சென்று இரண்டு ஆண்டு கடந்ததாலும் சொந்த ஊருக்கு அடுத்த ஓரிரு நாட்களில் திரும்ப திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக மனைவி மற்றும் மக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சசி தங்கியிருந்த இடத்தில் மாடிப்படியில் ஏறிய போது விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக அண்ணன் ஊருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அவரது மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற சசி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து சசியின் சடலத்தை விரைவாக ஊருக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறையும், மாநில அரசும் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Saudi Worker

Add your comments to Search results for Tamil Worker

Saturday, July 5, 2025

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : மரணமடைந்த பக்ருதீன்

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.

இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Search results for Tamil Worker

Sunday, February 4, 2024

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாரியப்பன்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இந்தியா, தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாகதேவியை அடுத்த சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது-50). இவருடைய தந்தை பெயர் முத்தையா, இவர் குவைத்தின் எகேலா பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம்(02/02/2024) வெள்ளிக்கிழமை அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த தகவலறிந்த மக்கள் சேவை மைய அமைப்பு துரிதமாக செயல்பட்டு சட்ட நடவடிக்கைகளை முடித்தது. இதையடுத்து அன்னாரின் பூத உடல் இன்று(04/02/2024) இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது. அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் இன்று மதியம் சரியாக 1 மணிக்கு குவைத்தின் சபா மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Tamil Worker

Tuesday, February 13, 2024

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

தமிழக இளைஞர் தவறி விழுந்ததில் மாலத்தீவில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ராஜேஷ்(வயது-20)

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலியில் இந்தியா,தமிழகம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது-20). அவர் இன்று(13/02/24) காலையில் அந்நாட்டின் சாந்தினி மாகுவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வேலை செய்யும் போது சீலின் உடைந்து 10-வது மாடியில் இருந்து தவறி படி கட்டுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி வழியாக தரைத்தளத்திலேயே விழுந்துள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையின்(IGMH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை அங்குள்ள தினசரி செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Maldives News | Indian Worker

Add your comments to Search results for Tamil Worker

Monday, January 22, 2024

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த சாமுவேல்

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தின் Al-Zour சாலை‌யி‌ல் கட்டுமானத்தில் உள்ள ஒரு இடத்தில் இன்று(21/01/24) ஞாயிற்றுக்கிழமை மணல் சரிந்து இருவர் மண்ணில் புதைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த தேடல் மற்றும் மீட்பு மையங்களின் தீயணைப்புபடை வீரர்கள் துரிதமாக செயல்பட்டுஇடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு தொழிலாளர்களையும் வெளியே எடுத்தனர் .

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதில் உயிரிழந்த இந்தியர் பெயர் சாமுவேல்(வயது-41) எனவும், தமிழகம், அறந்தாங்கி எனவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர் பெயர் திருஞானம் எனவும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான் எ‌ன்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Tamil Worker

Friday, July 4, 2025

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers

Add your comments to Search results for Tamil Worker