BREAKING NEWS
latest

Sunday, July 20, 2025

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலைய‌ம் வழியாக பெரும் அளவிலான புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 4 வங்காளதேச பயணிகள் நேற்றும் இன்றுமாக பிடிபட்டதாக சுங்கத்துறை இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Image : பிடிபட்ட புகையிலை பொருட்கள்

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலையத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கான சோதனைகளை தொடந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் முனையம் 4 (T4) யின் வழியாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பயணிகளிடம் இருந்து அதிக அளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(மெல்லும் புகையிலை) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இரண்டு தனிதனியான சம்பவங்களில், மெல்லும் புகையிலையை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக நான்கு வங்காளதேச பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று ஒரு பயணியிடமிருந்து 41 கிலோகிராம் மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாளான இன்று மற்ற மூன்று வங்காளதேச பயணிகளிடமிருந்து 159 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த அளவு 200 கிலோகிராமை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து விமான நிலைய சுங்கத்துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து,பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து, கைது செய்யப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் குவைத்திற்குள் இந்த புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு உதவி மற்றும் இவற்றை விமான நிலையத்தில் இருந்து பெற்று செல்ல காத்திருந்த மற்ற நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Customs Checking | Tobacco Seizure

Add your comments to

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் உங்கள் கையில் 3000 தினார் அல்லது அதற்கு மேல் பணம் உள்ளதா...?

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் போது பணம் தங்கம் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தால் சுங்க அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

Image : குவைத் விமான நிலைய சோதனை பகுதி

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் உங்கள் கையில் 3000 தினார் அல்லது அதற்கு மேல் பணம் உள்ளதா...??

குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக 3,000 தினார் அல்லது அதற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லும் பயணிகளும், அதேபோல் தங்கம்(அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக), விலையுயர்ந்த கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தாலும் அவற்றை சுங்க அறிவிப்பு படிவத்தை(self declaration form) பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சுங்கத்துறை பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் கை பையில் விலையுயர்ந்த சாமான்களை எடுத்துச் செல்லும் போது அந்த பொருட்களுக்கான விலைப்பட்டியல் மற்றும் உரிமை ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட பயணி கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சுங்கத்துறைக்கு தெரிவிக்காமல் மேற்குறிப்பிட்ட பொருட்களை கொண்டு பயணம் செய்வது சட்ட மீறலாகக் கருதப்படும். இதுபோன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

நாட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பயணிகள் சுங்கப் படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும், இது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு, சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்ட நடைமுறை குவைத் கடல் எல்லை வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ நாட்டின் எல்லை தாண்டி செல்லும் போதும் பொருந்தும் என்பதும் குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Customs Checking | Self Declaration

Add your comments to

Saturday, July 19, 2025

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இருந்து இயங்கும் இந்திய விமானங்களின் வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 12,000-லிருந்து 18,000-ஆக அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவிற்கும்-குவைத்திற்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான புதிய விமான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நெட்வொர்க்குகளை மறுசீரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய விமான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வாரந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 6,000 அதிகரித்துள்ளது.

தற்போது இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாஷ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025 முதல் குவைத்துக்கு புதியதாக கூடுதல் விமானங்களின் சேவை தொடங்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு விமான நிறுவனமும் தேவையான இடங்களை(ஸ்லாட்) பெற குவைத் சர்வதேச விமான நிலையத்துடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் குவைத்துக்கு வாரத்திற்கு கூடுதலாக 5,000 இருக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாஷ் ஏர் சுமார் 3,000 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும், ஏர் இந்தியா 1,500 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் போன்ற பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்ற நகரங்களிலிருந்து புதிய விமானங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 21 ஆம் தேதிக்குள் திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு குவைத் மற்றும் இந்திய விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையே ஜூலை 16-ஆம் தேதி புதிய விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், வாராந்திர இருக்கைகளின் ஒதுக்கீடு 12,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாடுகளும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்கின்ற தமிழக-கேரளா எல்லையான திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயணம் செய்வதால் இந்தியாவின் எந்த விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணச்சீட்டு கட்டணத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வழியாக பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் எப்போதும் ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Indian Airport | Flight Tickets

Add your comments to

Thursday, July 17, 2025

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் நடைமுறையில் உள்ள 4 வகையான விசிட் விசாக்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் எவ்வளவு நாள் தங்கலாம் என்பது உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம்

Image : குவைத் சிட்டி

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யபட்ட "குவைத் விசா தளத்தில்" ஆன்லைன் வழியாக கிடைக்கும். மேலும் “குவைத் ஆன்லைன் விசா தளத்தை" உள்துறை அமைச்சகம் நேற்று(16/07/25) புதன்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இனிமுதல் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் புரிதலுக்கா குடும்ப விசா எடுக்க ஆண்களுக்கு 800 தினார் சம்பளமும், குடும்ப விசிட் விசா எடுக்க 400 தினார் சம்பளமும் தேவையாகும். அதேபோல் குவைத்தை பொறுத்தவரை மனைவி அல்லது தனியாக தங்கி வேலை செய்கின்ற பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் இருந்தாலும் விசிட் மற்றும் குடும்ப விசா எடுக்க முடியாது. கணவர் மரணம் உள்ளிட்ட சில இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விசா வழங்கல் துறையின் உயர் அதிகாரியின் ஒப்புதல் அடிப்படையில் மிகவும் அரிதாக சில குடும்பங்களுக்கு விசா வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்கின்ற விசா கைவசம் உள்ள சில குறிப்பிட்ட துறையில்(Profession) வேலை செய்கின்ற நபர்களுக்கும் குவைத்துக்கு வருவதற்கு விசிட் விசா எடுக்க முடியும்

மேலும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக நாட்டிற்குச் வருவதற்கு விரும்பும் நபர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. சுற்றுலா விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். நாட்டிற்குளே வணிக நோக்கங்களாக கொண்டு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்ள அல்லது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து வியாபரங்களை ஏற்படுத்தி கொள்ள விரும்பும் நபர்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வணிகர்கள், நிறுவன பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் 30 நாட்களுக்கு வழங்கப்படும் அரசாங்க விசிட் விசாக்கள், அரசாங்க நோக்கங்களுக்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் கூட்டங்களில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வமாக அரசின் அழைப்பின் பேரில் குவைத்துக்கு வருகின்ற நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வழியாக இந்த விசிட் விசாக்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி First Comment யில் இணைக்கப்பட்டுள்ளது .

(குறிப்பு: அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவு செய்து முதலில் விசா கொள்கையை(நிபந்தனைகளை) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத்தில் பணத்திற்கு ஈடாக சூனியம் செய்து மோசடி செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Image : கைது செய்யப்பட்ட நபர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர். பணத்திற்கு ஈடாக மந்திரம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த இந்த நபரை கடந்த சில நாட்களாக கண்காணித்து ஆதாரத்துடன் அதிகாரிகள் சிக்க வைத்தனர்.

குற்றவாளி குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரையும் ஏமாற்றி, எதிர்காலத்தை கணிக்கவும், குடும்ப மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும் என்று நம்ப வைத்தார். அவரது இந்த சேவைகளுக்காக பெரும் தொகையையும் பெற்று வந்தார். மோசடி பற்றிய தகவல்களைப் பெற்ற அதிகாரிகள், ரகசிய நடவடிக்கை மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

மேலும் மந்திர புத்தகங்கள், பல்வேறு திரவங்கள், பொருட்கள், காகித சுருள்கள், பணம் சேகரிக்கும் பெட்டிகள் மற்றும் சூனிய சடங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடைகள் உள்ளிட்ட சூனியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களையும் குற்றவாளியின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் ஆகியவை வளைகுடா நாடுகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒரு செயல் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fraud Job | Black Magic | Kuwait Police

Add your comments to

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகமானது அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Image : குவைத் விமான நிலையம்

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

https://kuwaitvisa.moi.gov.kw என்பது குவைத் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விசா பெறுவதற்கான மின்னணு தளமாகும். இதன் வழியாக தனிநபர்கள் பல்வேறு வகையான மின்னனு விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், அவைகளின் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும், விசா தகவல்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற குடியேற்றம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு அணுகவும் அனுமதிக்கிறது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவுகளின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அலி அல்-அத்வானியின் மேற்பார்வையின் கீழ், “குவைத் விசா தளம்" அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் இன்று(16/07/25) புதன்கிழமை காலையில் அறிவித்தது.

குவைத்துக்கு வருகை தர விரும்பும் நபர்களுக்காக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்களை பெற இந்த தளமானது உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் பொது குடியிருப்பு விவகாரத்துறையால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப, வணிக மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் பெற தகுதியான பயனாளிகள் யார் யார் என்ற விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விசாவுக்கும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் காலம் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வருகை விசாக்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டவை என்றும், பார்வையாளர் மற்றும் ஸ்பான்சரிடமிருந்து அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, அது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் பின்வரும் விதிமுறை கட்டாயமாகும். மேலும் உங்கள் பாஸ்போர்ட் விசா பெற விண்ணப்பிக்கும் முன் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்(6 months Validity) விதத்தில் இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவுசெய்து முதலில் விசா கொள்கையைச் சரிபார்க்கவும்(விசா விதிமுறைகளை சரிபார்க்கவும்) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விசா வகை மற்றும் விசா பெற தேவையான ஆவணங்களைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடும். அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறுவது அல்லது விசா நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட விசா நிபந்தனைகளை மீறுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Visit Visa | Online Visa

Add your comments to

Tuesday, July 8, 2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த குழந்தை ஜாசா ஹைரா

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Death | Oman Accident | Indian Family

Add your comments to