குவைத்தில் பணத்திற்கு ஈடாக சூனியம் செய்து மோசடி செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்
Image : கைது செய்யப்பட்ட நபர்
குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்
குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர். பணத்திற்கு ஈடாக மந்திரம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த இந்த நபரை கடந்த சில நாட்களாக கண்காணித்து ஆதாரத்துடன் அதிகாரிகள் சிக்க வைத்தனர்.
குற்றவாளி குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரையும் ஏமாற்றி, எதிர்காலத்தை கணிக்கவும், குடும்ப மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும் என்று நம்ப வைத்தார். அவரது இந்த சேவைகளுக்காக பெரும் தொகையையும் பெற்று வந்தார். மோசடி பற்றிய தகவல்களைப் பெற்ற அதிகாரிகள், ரகசிய நடவடிக்கை மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.
மேலும் மந்திர புத்தகங்கள், பல்வேறு திரவங்கள், பொருட்கள், காகித சுருள்கள், பணம் சேகரிக்கும் பெட்டிகள் மற்றும் சூனிய சடங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடைகள் உள்ளிட்ட சூனியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களையும் குற்றவாளியின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் ஆகியவை வளைகுடா நாடுகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒரு செயல் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Fraud Job | Black Magic | Kuwait Police