BREAKING NEWS
latest

Worker Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Worker Visa செய்திகள், கட்டுரைகள், Worker Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, July 22, 2025

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது

Image : ஷேக் ஃபஹத் யூசப்

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Worker Visa

Monday, July 21, 2025

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல்களை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் கைது

Image : பிடிபட்ட ஆள்கடத்தல் கும்பல்

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் இந்தியர்கள் உட்பட்ட விசா விற்பனை மற்றும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலை குவைத்தின் குடிவரவுத்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. 4 நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டவரும் மற்றும் சுமார் 25 நிறுவனங்களில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஒரு குடிமகனின் பெய‌ரில் விசா விற்பனை மற்றும் கடத்தலை இவர்கள் நடத்தி வந்தனர்.

மேலும் வெளியாகியுள்ள செய்தியில் விசாரணையின் போது நாட்டிற்கு வெளியே இருந்தும் மற்றும் நாட்டிற்க்கு உள்ளேயும் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் அவர்களின் விசாக்களை சட்டவிரோதமாக மாற்றி உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து குவைத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வந்து 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து குவைத்திலுள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு அவர்களின் விசாக்களை மாற்றினர். இந்த சட்டவிரோதமாக குற்றத்தில் ஒரு குவைத்தி, இடைத்தரகர்களாக இரண்டு இந்தியர்கள், ஒரு சிரியரும் செயல்பட்டனர். குற்ற்றவாளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Worker Visa

Thursday, July 17, 2025

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் நடைமுறையில் உள்ள 4 வகையான விசிட் விசாக்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் எவ்வளவு நாள் தங்கலாம் என்பது உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம்

Image : குவைத் சிட்டி

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யபட்ட "குவைத் விசா தளத்தில்" ஆன்லைன் வழியாக கிடைக்கும். மேலும் “குவைத் ஆன்லைன் விசா தளத்தை" உள்துறை அமைச்சகம் நேற்று(16/07/25) புதன்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இனிமுதல் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் புரிதலுக்கா குடும்ப விசா எடுக்க ஆண்களுக்கு 800 தினார் சம்பளமும், குடும்ப விசிட் விசா எடுக்க 400 தினார் சம்பளமும் தேவையாகும். அதேபோல் குவைத்தை பொறுத்தவரை மனைவி அல்லது தனியாக தங்கி வேலை செய்கின்ற பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் இருந்தாலும் விசிட் மற்றும் குடும்ப விசா எடுக்க முடியாது. கணவர் மரணம் உள்ளிட்ட சில இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விசா வழங்கல் துறையின் உயர் அதிகாரியின் ஒப்புதல் அடிப்படையில் மிகவும் அரிதாக சில குடும்பங்களுக்கு விசா வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்கின்ற விசா கைவசம் உள்ள சில குறிப்பிட்ட துறையில்(Profession) வேலை செய்கின்ற நபர்களுக்கும் குவைத்துக்கு வருவதற்கு விசிட் விசா எடுக்க முடியும்

மேலும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக நாட்டிற்குச் வருவதற்கு விரும்பும் நபர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. சுற்றுலா விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். நாட்டிற்குளே வணிக நோக்கங்களாக கொண்டு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்ள அல்லது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து வியாபரங்களை ஏற்படுத்தி கொள்ள விரும்பும் நபர்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வணிகர்கள், நிறுவன பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் 30 நாட்களுக்கு வழங்கப்படும் அரசாங்க விசிட் விசாக்கள், அரசாங்க நோக்கங்களுக்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் கூட்டங்களில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வமாக அரசின் அழைப்பின் பேரில் குவைத்துக்கு வருகின்ற நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வழியாக இந்த விசிட் விசாக்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி First Comment யில் இணைக்கப்பட்டுள்ளது .

(குறிப்பு: அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவு செய்து முதலில் விசா கொள்கையை(நிபந்தனைகளை) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Worker Visa

Sunday, October 29, 2023

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வீட்டு தொழிலாளர்(வீட்டுப் பணியாளர்கள்) பிரிவை சேர்ந்த அனைவரின் பணி அனுமதியையும் 3 மாதங்களுக்குப் பிறகு, ஸ்பான்சர் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

Image : துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் உள்துறை அமைச்சகம் இன்று(29/10/23) ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் நாட்டிலிருந்து வெளியேறிய வீட்டுப் பணியாளரின்(Article-20) குடியிருப்பு அனுமதியை(விசாவை) 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஸ்பான்சர்(குவைத்தி) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகின்ற நவம்பர்-5,2023 முதல் இது அமலுக்கு வரும் என்று முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் அஹ்மத் அல் சபாவை மேற்கோள்காட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'SAHAL' செயலி மூலம் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யலாம். அது முடியாவிட்டால், குடியிருப்பு விவகாரத் துறையின் அலுவலகம் ஒன்றுக்கு சென்று தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். விசா Validity உள்ள ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி 6 மாதங்களுக்குப் பிறகு குவைத்தில் நுழையத் தவறினால், தொழிலாளியின் குடியிருப்பு அனுமதி தானாக(Automatically) முன்வந்து ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய உத்தரவு 6 மாத கால தாமதத்தை தவிர்க்க உதவும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதில் பிரச்சனை என்னவென்றால், பணம் கொடுத்து வெளியே விசா அடித்து சட்டவிரோதமாக(இப்படி செய்வது தொழில் சட்டவிரோதமான செயல்) ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவைத்தில் வேலை செய்து வருகி்ன்றனர். இந்த வகை விசா உள்ள நபர்கள் குவைத் விமான நிலையம் வழியாக தாயகம் செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்கு(குவைத்திக்கு) குறுந்தகவல் போகும். புதிய உத்தரவை பயன்படுத்தி 90 நாட்களுக்குள் நீங்கள் திரும்பவில்லை என்றால் உங்கள் விசாவை ஸ்பான்சர் கேன்சல் செய்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

எனவே இப்படிப்பட்ட நபர்கள் குவைத் திரும்பும் முன்னர் உங்கள் விசா Validity ஐ சோதனை செய்த பிறகு குவைத் திருப்புவது நல்லது. இல்லை என்றால் குவைத் விமான நிலையம் வரையில் வந்து குவைத்தில் நுழைய முடியாமல் மீண்டும் டிக்கெட் போட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்...இல்லை ஏற்படுகிறது. உங்களுக்கு இப்படி வெளியே விசா அடித்து தருகின்ற நபர்கள் இப்படி பலரை ஏமாற்றுகின்றனர். இதிலும் ஒருபடி மேலே சென்று உங்கள் மேல் வழக்கு பதிவும் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் என்றால் கைது செய்து Finger வைத்தே அனுப்புவார்கள். பிறகு குவைத் வரவே முடியாது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Domestic Worker | Kuwait Visa | Visa Cancel

Add your comments to Search results for Worker Visa

Tuesday, December 13, 2022

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் பெற விண்ணப்பம் பெறப்படுகிறது

Image : செய்தி பதிவுக்காக மட்டுமே

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்ப விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் தாய்நாடுகளில் சிக்கிக்கொண்டனர். இப்படி குவைத்திற்கு வர முடியாமல் தவித்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசா வழங்குவது மீண்டும் துவங்கியது முதல் விசாவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருந்தாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளின் குடிமக்களும் இந்த விசா வழங்குவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசாக்கள் வழங்குவதை கடந்த நவம்பர்-20,2022 முதல் மீண்டும் தொடங்க அமைச்சகம் முடிவு செய்தது.

அதே நேரத்தில் மனைவி,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகளுக்கான குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்குவது மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kuwait Visa | Indian Worker | Family Visa

Add your comments to Search results for Worker Visa

Wednesday, July 7, 2021

குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்

குவைத்தில் ஆகஸ்ட் முதல் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய போக்குவரத்து நிர்வாக இயக்குநர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்

குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் குடியிருப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்

குவைத்தில் ஆகஸ்ட் 1 முதல் அனைத்து குடியிருப்பாளர்களும்(வெளிநாட்டினர்) நிபந்தனைகளுடன் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று குவைத் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் இயக்குநர் யூசெப் அல் பாவ்சன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சரவையின் முடிவுகளின்படி குவைத்தால் அனுமதி வழங்கியுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மற்றும் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி(Validity Visa) கைவசம் உள்ள அனைத்து பயணிகளும் ஆகஸ்ட் 1 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதற்காக Professional Worker எனவோ அல்லது சாதாரண தொழிலாளர்கள் என்ற பாகுபாடோ இருக்காது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுபோல் நாளொன்றுக்கு நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இன்று முதல் (7/07/21) 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களின் சான்றிதழ்கள் உள்ள மற்ற ஆவணங்களின் உண்மைதன்மை கண்டறிய சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்பு தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது என்றும், இதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் குவைத் செய்தித்தாள் அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களின் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான சிறப்பு பயன்பாட்டு தளத்தை குவைத் அமைச்சகம் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், சில தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக சில நாட்களுக்குள் அவற்றின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் சான்றிதழ்களில் மோசடிகள் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது சிறப்புக் குழுவின் மேற்பார்வையில் இவற்றின் பரிசுத்தொகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தளத்தில் பதிவு செய்த நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் வழியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிகிறது. இருப்பினும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் உட்பட பலர் ஏற்கனவே தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்த தளத்தில் பதிவு செய்திருந்தனர். அனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் பதில் எதுவும் வராத நிலையில் குழப்பமடைந்துள்ளனர்.

Add your comments to Search results for Worker Visa