BREAKING NEWS
latest

Tuesday, February 13, 2024

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

தமிழக இளைஞர் தவறி விழுந்ததில் மாலத்தீவில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ராஜேஷ்(வயது-20)

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலியில் இந்தியா,தமிழகம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது-20). அவர் இன்று(13/02/24) காலையில் அந்நாட்டின் சாந்தினி மாகுவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வேலை செய்யும் போது சீலின் உடைந்து 10-வது மாடியில் இருந்து தவறி படி கட்டுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி வழியாக தரைத்தளத்திலேயே விழுந்துள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையின்(IGMH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை அங்குள்ள தினசரி செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Maldives News | Indian Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

« PREV
NEXT »