பேரிடர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கான பிரபல லுலு குழும தலைவர் 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image : யூசுப் அலி காசோலையினை வழங்கிய காட்சி
பிரபல லுலு குழும தலைவர் யூசுப் அலி அவர்கள் இலங்கை மக்களுக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்
இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை(இலங்கை ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்) வழங்கியதற்காக லுலு குழும நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி அவர்களுக்கு அமீரகதற்கான இலங்கை தூதரகம் நன்றியைத் தெரிவித்துள்ளது .
அவருடைய பங்களிப்பு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்தப் பங்களிப்பு லுலு குழுமத்தின் கருணை மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடந்து வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தூதரகம் தெரிவித்துள்ளது.
Srilanka Workers | Yusufali Lulu | Srilanka Flood

