BREAKING NEWS
latest

Indian Girl - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian Girl செய்திகள், கட்டுரைகள், Indian Girl புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, September 20, 2025

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண் துபாய் சாலையில் தனியாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.

நேரம் அதிகாலை 02:37...இந்தியா மாதிரி கிடையாது இந்த ஊர்,துபாய் வாழ் இந்தியப் பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Image: வீடியோ வெளியிட்ட இந்திய பெண்

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண் துபாய் சாலையில் தனியாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் இரவில் பயமின்றி சாலையில் தனியாக நடக்க முடியுமா...? இந்திய சூழலில் இது எளிதான காரியம் அல்ல. ஆனால் துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு இளம் இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, துபாயில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் துபாய் நகரத்தின் வழியாக ஒரு இந்தியப் பெண் தனியாக நடந்து செல்லும் வீடியோ இதுவாகும். துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வைரல் வீடியோவில் உள்ள பெண்ணின் த்ரிஷா ராஜ் என்பதாகும்.

அந்த வீடியோவில், த்ரிஷா அதிகாலை 2:30 மணிக்கு துபாய் தெருக்களில் தனியாக நடப்பது எப்படி பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று பேசுகிறார். வீடியோவில் இப்போது அதிகாலை 2.37 மணி என்றும், சாலையில் தனியாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். உலகிலேயே துபாயில் மட்டுமே இது சாத்தியம் என்றும், துபாய்க்கு வாருங்கள் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். இங்கு பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் த்ரிஷா கூறுகிறார்.

துபாயில் பெண்களின் பாதுகாப்பை தனது சொந்த நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் த்ரிஷா ராஜ். இந்தியாவில், இதுபோன்ற நேரங்களில் தனியாக வெளியே செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆண்களின் துணை பொதுவாக தேடவேண்டியது அவசியம். ஆனால் துபாய் இதிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. உலகில் வெவ்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் அனுபவங்களைப் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK மீது CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL குழுவில் இணையுங்கள்

Indian Girl | Dubai Road | Girl Safety

Add your comments to Search results for Indian Girl

Monday, November 28, 2022

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்:

குவைத்தில் தேடப்பட்ட பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்கப்பட்ட அபியா

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்

குவைத்தின் அப்பாசியாவில் இருந்து நேற்று(27/11/2022) மாலை 6:30 முதல் காணவில்லை என்று தேடப்பட்ட அபியா என்ற இந்திய பெண் குழந்தை நள்ளிரவில் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவி்த்துள்ளனர்.நேற்று(27/11/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இந்தி குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக பகிரப்பட்ட நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.

Missing Child | Indian Girl | Kuwait Police | Kuwait News

Add your comments to Search results for Indian Girl

Tuesday, January 3, 2023

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த இடத்தில் வைத்து அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளன

Image credit: உயிரிழந்த ரிபாயா

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்தியா, தமிழகம், திருச்சி மாவட்டம், கீழக்கரை பகுதியை சேர்ந்த பாத்திமுத்து ரிபாயா(வயது-40) என்ற பெண்மணி பணியிடத்தில் வைத்து பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்தவர், பணியிடத்தில் தங்கியிருந்த அறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதால் மூச்சுத்திணறி ஞாயிற்றுகிழமை அன்று(1/01/2023) உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

உயிரிழந்த ரிபாயா அவர்களுக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் என்று 4 குழந்தைகள் உள்ளனர். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலை செய்து மாதாமாதம் குடும்பத்துக்கு பணத்தை அனுப்பி வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தாயின் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வந்த அவருக்கு இப்படியொரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Housemaid India | Indian Girl | Maid Death |

Add your comments to Search results for Indian Girl