BREAKING NEWS
latest

Tuesday, January 3, 2023

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த இடத்தில் வைத்து அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளன

Image credit: உயிரிழந்த ரிபாயா

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்தியா, தமிழகம், திருச்சி மாவட்டம், கீழக்கரை பகுதியை சேர்ந்த பாத்திமுத்து ரிபாயா(வயது-40) என்ற பெண்மணி பணியிடத்தில் வைத்து பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்தவர், பணியிடத்தில் தங்கியிருந்த அறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதால் மூச்சுத்திணறி ஞாயிற்றுகிழமை அன்று(1/01/2023) உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

உயிரிழந்த ரிபாயா அவர்களுக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் என்று 4 குழந்தைகள் உள்ளனர். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலை செய்து மாதாமாதம் குடும்பத்துக்கு பணத்தை அனுப்பி வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தாயின் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வந்த அவருக்கு இப்படியொரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Housemaid India | Indian Girl | Maid Death |

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »