BREAKING NEWS
latest

Uae Suicide - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Uae Suicide செய்திகள், கட்டுரைகள், Uae Suicide புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, July 10, 2025

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த பெண் மற்றும் குழந்தை

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

ஷார்ஜாவில் இந்தியா,கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் அவரது ஒன்றரை வயது மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.கொல்லம் மாவட்டத்தில் உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடைய மனைவி விபஞ்சிகா(33) மற்றும் அவருடைய குழந்தை வைபவியுமே சடலமாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட அறிக்கைப்படி தற்கொலை செய்த கயிற்றை போட்டு முதலில் ஒரு முனையில் குழந்தையை தொங்க விட்ட பிறகு மறுமுனையில் விபஞ்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக,பெண்ணின் கழுத்தில் தற்கொலைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டதாகக் சம்பவ இடத்தைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார்.

குழந்தையின் மரணத்திற்கு தாயே காரணம் என்பது ஆரம்ப கட்ட தடயங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் பணிபுரியும் விபஞ்சிகாவும், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வசதி வாரிய பொறியாளரான நிதிஷுக்கும் இடையே கடந்த சிறிது காலமாக நல்லுறவில் இல்லை எனவும், இருவரும் தனித்தனி இடங்களில் வசித்து வந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வரதட்சணை கேட்டு விபாஞ்சிகாவை நிதிஷ் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், விவாகரத்து பெற அழுத்தம் கொடுத்ததாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், விபாஞ்சிகாவுக்கு விவாகரத்து செய்வதில் ஆர்வம் இல்லை. விவாகரத்துசெய்தால் உயிருடன் வாழ மாட்டேன் என்று அந்தப் பெண் தனது வேலைக்காரியிடமும் தாயிடமும் கூறி வந்தாள். விவாகரத்து தொடர்பாக விபாஞ்சிகாவுக்கு வழக்கறிஞரின் நோட்டீஸ் நேற்று பிற்பகுதியில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது மகளைக் கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த அமீரக அதிகாரிகளிடம் கேட்போம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக அழைத்தும் கதவு உட்பட்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பிறகு, அவசரகாலப் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண்ணின் உடல் மதியம் 2 மணியளவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அல் புஹைரா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Baby Mother | Uae Suicide | Indian Family

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Uae Suicide