BREAKING NEWS
latest

Monday, September 11, 2023

குவைத்தில் தூங்கும் போது உயிரிழந்த இந்தியர் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

வேலைக்குச் செல்ல எழுந்திருக்காததால் அறையில் உள்ள நண்பர்கள் அவரை அழைத்த போது அவர் எழவில்லை

Image : உயிரிழந்த சைஜு

குவைத்தில் தூங்கும் போது உயிரிழந்த இந்தியர் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியா, கேரளா மாநிலம் , திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த பவுடிகோணத்தை சேர்ந்தவர் துளசிதரன் சைஜு(வயது-49), இவர் குவைத்தில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்திலேயே இறந்தார். அல் ஜஹ்ரா நேஷனல் கிளீனிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்.

நேற்று சனிக்கிழமை வேலைக்குச் செல்ல எழுந்திருக்காததால், அவரது அறையில் உள்ள நண்பர்கள் அவரை அழைத்தனர் ஆனால் அவர் எழவில்லை. மரண காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு போபி என்ற மனைவியும், ஸ்வாதிஷ் மற்றும் ஸ்வேதா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சட்ட நடவடிக்கைகளை முடித்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளளை OICC அமைப்பின் கெயர் டீம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துயரமான செய்தி இன்றையதினம் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தூங்கும் போது உயிரிழந்த இந்தியர் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »