BREAKING NEWS
latest

Monday, September 11, 2023

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் கடந்த 29 ஆண்டுகளாக தாயகம் செல்லாத தொழிலாளி அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்

Image : Kuwait Police

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் நேற்று நடந்த பாதுகாப்பு சோதனையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு(விசா) அனுமதி காலாவதியான எகிப்திய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் முட்லா விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது குடியிருப்பு அனுமதி கடந்த 1998 இல் காலாவதியானது.

இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1994-ல் அவர் குவைத் வந்ததாகவும், இது வரையில் வீட்டிற்கு(தாயகம்) செல்லவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இந்த தகவல் அதிகாரிகளை மட்டுமல்ல குவைத்திலுள்ள வெளிநாட்டினர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு தற்போது 56-வயது எனவும், அவர் தனது சக ஊழியர்களிடையே ராம்சேஸ் என்ற பெயரில் அறியப்பட்டார். குவைத் வந்ததிலிருந்து, அவர் முட்லாவில் உள்ள பண்ணையில் தான் வேலை செய்து வந்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை திருப்பி அனுப்பும் மையத்திற்கு(நாடுகடத்தல் மையம்) மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

« PREV
NEXT »