BREAKING NEWS
latest

Monday, September 11, 2023

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Image : ஒமான் சுல்தான்

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஸ்கட்: மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்களை அனுப்பவும், அவசர உதவிகளை வழங்கவும் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஞாயிற்றுக்கிழமை அரச ஆணை பிறப்பித்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள மராகேஷில் உள்ள வரலாற்று கட்டிடங்களும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

« PREV
NEXT »