BREAKING NEWS
latest

Saturday, July 8, 2023

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத்தில் போலியான முறையில் ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர்

Image : கைதான நபர்கள்

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத் கிரிமினல் செக்யூரிட்டி பிரிவினர் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து போலியான முறையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பலை கைது செய்துள்ளனர், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் 33 பிலிப்பைன்ஸ் நபர்களை கைது செய்துள்ளது

இவர்கள் கல்விச் சான்றிதழ்கள், திருமண ஒப்பந்தங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை போலியாக உருவாக்கி, இந்த மோசடி ஆவணங்கள் குடியுரிமை நிலையை மாற்றுதல் மற்றும் விசா தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கண்டறிந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் மற்றும் மீறல்கள் செய்யும் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளது

Phillipines Arrested | Fraudulent Documents | Kuwait Police

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

« PREV
NEXT »