BREAKING NEWS
latest

Sunday, February 28, 2021

குவைத்தில் வெளிநாட்டு தம்பதியினர் மதுபான குவியலுடன் கைது செய்யப்பட்டனர்

குவைத்தில் வெளிநாட்டு தம்பதியினர் மதுபான குவியலுடன் கைது செய்யப்பட்டனர்;இதுபோல் Jahra பகுதியில் இருந்து கள்ளச்சாராய குவியலுடன் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Image credit: கைப்பற்றப்பட்ட மதுபான குவியல்

குவைத்தில் வெளிநாட்டு தம்பதியினர் மதுபான குவியலுடன் கைது செய்யப்பட்டனர்

குவைத்தின் Hawally பகுதியில் ஒரு தம்பதியினர் மது கடத்தும்போது கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நேற்று(27/02/21) காலையில் Hawally பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு பேர் அட்டைப்பெட்டிகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதை கவனித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் மது பாட்டில்கள் நிரப்பிய அட்டைப்பெட்டிகளை விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அதிகாரிகள் இவர்களை விரட்டி பிடித்தனர்.

பின்னர் அட்டைப் பெட்டிகளை பரிசோதனை செய்தபோது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் மேல்நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இவரும் நேப்பாளம் நாட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுபோல் Jahra பகுதியில் பெரும் அளவிலான கள்ளச்சாராய உற்பத்தி ஆலை கண்டறியப்பட்டது எனவும் இதில் தொடர்புடைய 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர்களிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த கள்ளச்சாராயம் நிரப்பப்பட்ட பாட்டில்கள்,குவியல் குவியலாக கள்ளச்சாராய கலவை நிரப்பப்பட்ட கலன்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இவர்கள் 5 பெரும் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் தகவல்கள் தெரியவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வெளிநாட்டு தம்பதியினர் மதுபான குவியலுடன் கைது செய்யப்பட்டனர்

« PREV
NEXT »