BREAKING NEWS
latest

Saturday, February 27, 2021

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கோவிட்டைத் தொடர்ந்து சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள்(தடை) மார்ச்-31,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது. அதே வேளையில் DGCA-யால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது. மேலும் அந்த அறிக்கையில் சூழ்நிலைகளைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் Air-Bubble போன்ற ஒப்பந்தங்கள் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களின் சேவைகள் அனுமதிக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Image credit:DGCA Official

நாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச்,2020 முதல் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் தொடர்பான தேதி பலமுறை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இந்த பிப்ரவரி-2021 இறுதியுடன் கடைசியாக விதிக்கப்பட தேதி முடிவடையும் இந் நிலையில்,இன்று மீண்டும் மார்ச்-31,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு இறுதியில் விலக்கப்பட்டு, உள்நாட்டு சேவைகள் மீண்டும் தொடங்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்-31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »