BREAKING NEWS
latest

Wednesday, December 23, 2020

குவைத்தில் மின்சாரம் தாக்கியதில் இந்தியர் பலி; மற்றோருவர் படுகாயமடைந்தார்


Dec-23,2020

குவைத்தின் Rumaithiya பகுதியில் உள்ள  மின்மாற்றி(Transformer) ஒன்றின் பராமரிப்புப் பணியின் போது  மின்சாரம் தாக்கியதில் இந்தியன் ஒருவர் இறந்தார் எனவும் மற்றொரு நபர் படுகாயமடைந்தார் என்றும் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் தடயவியல் ஆய்வை மேற்கொண்டு, உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்தனர். இறந்த இந்தியர் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் அறிக்கையில் வெளியிடவில்லை. விபத்தின் விளைவாக ஏற்பட்டது மின்தடை சரிசெய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மின்சாரம் தாக்கியதில் இந்தியர் பலி; மற்றோருவர் படுகாயமடைந்தார்

« PREV
NEXT »