BREAKING NEWS
latest

Wednesday, December 23, 2020

குவைத்தின் Jahra மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர் தாயகத்தில் மரணமடைந்தார்

Dec-23,2020

குவைத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்ற செவிலியர் தாயகத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. Jahra மருத்துவமனையில் செவிலியராக சேவையாற்றிய கேரளா கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் செபாஸ்டியன் (வயது-43) நேற்று உயிரிழந்ததார். இவர் Jahra மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்தார், மேலும் ஆம்புலன்ஸ் செவிலியராகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றினார். 

அவர் உலநலக்குறைவு காரணமாக கவலைக்கிடமாக கடந்த சில நாட்களாக எர்ணாகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது. அவருக்கு துளசி ஜோசப் என்ற மனைவியும்,டூயல் மரியா ஜோசப் மற்றும் ஜோயல் ஜோசப் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் Jahra மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர் தாயகத்தில் மரணமடைந்தார்

« PREV
NEXT »