BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படுவதற்கும்,வருவதற்கும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது


குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான நிபந்தனைகளை குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA)  சற்றுமுன் அறிவித்துள்ளது.இதன் விவரங்களை அதிகாரிகள் ட்விட்டரில் வழியாக வெளியிட்டுள்ளது:

1)குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் "குவைத்-டிராவலர்" தளத்தில் http://kuwaitmosafer.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

2) இரண்டாவது நிபந்தனை என்னவென்றால், கோவிட் நிலைமை இருப்பதால் குடிமக்கள்(Kuwaity) பயணத்தின்போது சுகாதார காப்பீடு வைத்திருக்க வேண்டும்.

3) குடிமக்கள் "குவைத்-டிராவலர்" தளத்தில் உள்ள உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். 

4)மேலும் செல்லும் நாடுகளில் உங்களுக்கு பி.சி.ஆர் Nagative சான்றிதழ் தேவைப்பட்டால், அதை உங்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் நாட்டிற்கு வருபவர்களுக்கு நிபந்தனை பின்வருமாறு:

1) Shlonak Applicationயில் பதிவு செய்ய வேண்டும்

2) 96 மணிநேரத்திற்கு உள்ளே எடுத்த நோய்தொற்று Nagative பி.சி.ஆர் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்

3) நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாகும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படுவதற்கும்,வருவதற்கும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »