BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

இந்தியா மற்றும் கத்தார் இடையிலான காற்றுக்குமிழி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது

கத்தார் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான விமான காற்றுக்குமிழி (Air-Bubble)ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் ஜனவரி 31,2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ பக்கத்தில செய்தி வெளியிட்டுள்ளது.முன்னர் இருநாடுகளுக்கு இடையிலான செய்யப்பட்ட காற்றுக்குமிழி ஒப்பந்த காலம் டிசம்பர் 31-றுடன் முடிகிறது. இதையடுத்து இப்போது இந்த ஒப்பந்தம் ஜனவரி 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் Transit  பயணமும் அனுமதிக்கப்படுகிறது எனவும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து இந்தியர்கள் கத்தார் வழியாக தங்கள் சொந்த நாட்டை அடையலாம்.  நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்களும் இந்த இந்தியா-கத்தார் காற்றுக்குமிழி ஒப்பந்தத்தை பயன்படுத்தி தாயகம் திரும்பலாம் என்றம் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்தியா மற்றும் கத்தார் இடையிலான காற்றுக்குமிழி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »