BREAKING NEWS
latest

Wednesday, December 2, 2020

புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து:

புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து:

Dec-2,2020

புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது. புயல் காரணமாக தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் சென்னை மற்றும் பெங்களூரு விமானங்கள் நாளை(வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர் .


 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து:

« PREV
NEXT »