Labor Law - Arab Tamil Daily - The 24×7 Gulf News
சற்றுமுன் Labor Law செய்திகள், கட்டுரைகள், Labor Law புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.
Friday, June 21, 2019
Add your comments to
Wednesday, July 22, 2026
குவைத் மனிதவள ஆணையம் வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில் தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது
Image : குவைத் திறந்த வெளி தொழிலாளர்கள்
குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:
குவைத் மனிதவள ஆணையம் இன்று(22/07/26) புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில், தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது. இதில், சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வரும் சூழல்கள் மற்றும் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களில் தொழிலாளியின் பணியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வேலையளிப்பவருக்கு(முதலாளிக்கு) உண்டு என்று ஆணையம் விளக்கியுள்ளது. இதில், காலவரையற்ற ஒப்பந்தங்களில் உரிய அறிவிப்புக் காலத்தைக்(Notice Period) கடைப்பிடித்து பணிநீக்கம் செய்வது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்வது ஆகியவை அடங்கும். அதேவேளையில், பணிநீக்க முடிவு தவறானது என்று கருதினால், தொழிலாளர் சட்டத்தின் 41, 44 மற்றும் 46-வது பிரிவுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கான உரிமை அத்தொழிலாளிக்கு உண்டு எனவும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை தொழிலாளிக்கு உண்டு என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 48-வது பிரிவின்படி, வேலையளிப்பவர்(Sponsor) ஒப்பந்தம் அல்லது தொழில் சட்டத்தை மீறுதல், முதலாளி அல்லது அவரது நிறுவனத்தின் துணை அதிகாரிகளின் தாக்குதல் அல்லது தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகவும், அதே சமயம் பணிக்கால நிறைவுக்கான ஊக்கத்தொகையைப்(End Of Service Bonus) பெறவும் அவருக்கு உரிமை உண்டு.
அதேபோல் சில குறிப்பிட்ட சூழல்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொழிலாளர் சட்டத்தின் 49 மற்றும் 50-வது பிரிவுகளின்படி தானாகவே முடிவுக்கு வருகிறது என்றும் ஆணையம் விளக்கியுள்ளது. இதில் தொழிலாளியின் மரணம், வேலை செய்ய இயலாமைக்கான ஆதாரம், மருத்துவ விடுப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகும் தொடரும் நோய், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் அல்லது தொழிலாளிக்கு வேலையளிப்பவர் திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் இறுதித் தீர்ப்பு ஆகியவை சூழ்நிலைகளில் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒப்பந்தம் முடிவடைகிறது..
Kuwait Worker | Labor Law | Kuwait Workers
Add your comments to Search results for Labor Law
Stay Connected
Advertisement 4
Most Reading
-
Dec-12,2020 குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நேரத்தில் ஏர் லிப்ட்டிங் மூலம் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்...
-
Dec-13,2020 உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதி...
-
Photo Credit: Monorama Dec-16,2020 பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதத்தின் கடும் குளிரில் அவ்வளவு நாட்கள் உடன் பயணித்த பாக...
-
Dec-14,2020 குவைத்தில் உள்ள முதலாளி(Sponsore) வீட்டில் இருந்து 20,000 தினார் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி இந்தியாவை சேர்ந்த வீட்டுப் பணிப்ப...
-
Dec-14,2020 குவைத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் ஷேக் ஜாபீர் ஸ்டேடியத்தில் பொதுப்பணி துறை அமைச்சகத்தால் குவைத...





