BREAKING NEWS
latest

Sunday, March 23, 2025

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஈத் தொடர் விடுமுறை 9 நாட்கள் கிடைக்குமா அல்லது 5 நாட்களாக சுருங்குமா என்பது பிறை தென்படும் தேதியை பொறுத்து இந்த வருடம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

Image : குவைத் சிட்டி டவர்

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்த ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும் என்ற கனவில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பேரிடியை கொடுத்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டிற்கான ஈத் விடுமுறை மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே ஈத் விடுமுறை எப்போது முடிவடைகிறது என்பதை அறிய முடியும். மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தென்பட்டால் மார்ச் 28 மற்றும் 29 வார விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் வரையிலான 3 நாட்கள் ஈத் விடுமுறை உட்பட தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதை தொடந்து ஏப்ரல்-2,2025 புதன்கிழமை முதல் வேலை நாள் தொடங்கும்.

ஆனால் மார்ச்-29,2025 அன்று பிறை தென்படாத சூழ்நிலை ஏற்பட்டால் மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல்-3,2025 வியாழன் வரை தொடர்ந்து 5 நாட்கள் வரை பொது விடுமுறையும், விடுமுறை தொடங்குவதற்கும் முன்னரும்-பின்னரும் உள்ள 4 நாட்கள் வார விடுமுறை உட்பட 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், இதையடுத்து ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும். இதில் டிஸ்ட் எங்கே என்று தானே கேட்கிறீங்க....??? மீதியை படியுங்கள் புரியும்......

அதாவது ஏப்ரல் 2 வேலை நாளா இல்லையா என்பதை அறிய ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ஏப்ரல் 2, 3(புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் விடுப்பு எடுப்பவர்கள் வருகின்ற மார்ச்-27 வியாழக்கிழமைக்குள் விடுப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு விடுப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு, அவசரகால விடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி விடுமுறை எடுத்து நழுவும் நபர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் கட்டுபாடு விதித்துள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்று கமிஷன் தடை விதித்துள்ளது.

அதேபோல் அவசரகால விடுப்பு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவசர விடுமுறை அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்த நாட்களில் பணிக்கு வராத ஊழியர்களின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடுமுறை பதிவு செய்யப்படும் என்றும், இந்த நாட்கள் வருடாந்திர விடுப்பில் இருந்து கழிக்கப்படும் எனறும் அறிவிக்கையில் எச்சரித்துள்ளது. எங்களுக்கு கிடைக்காத 9 நாட்கள் தொடர் விடுமுறை உங்களுக்கு மட்டும் எதுக்குடா....??? என்ற தனியார் கம்பெனி ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் குமுறல் சத்தம் சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு கேட்டிருக்குமோ.....????

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Official Holiday | Eid Holidays | Kuwait Csc

Add your comments to

ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே பயங்கரமான தீ விபத்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மின்தடை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது

Image : துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி

ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே பயங்கரமான தீ விபத்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மின்தடை காரணமாக அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இந்திய நேரப்படி இன்று(21/3/25) வெள்ளிக்கிழமை காலையில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இது தொடர்பான செய்தி விமான நிலையம் வெளியிட்டது. விமான நிலையம் இன்று நள்ளிரவு 11:59 PM வரையில் மூடப்பட்டு இருக்கும். ஆன்லைன் விமான கண்காணிப்பு சேவை தளமான FlightRadar24 வெளியிட்டுள்ள தகவல்படி குறைந்தது 1,351 விமானங்களின் சேவைகள் இதனால் பாதிக்கப்படும். ஹீத்ரோ என்பது இங்கிலாந்தின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும், 2024 இல் அந்த விமான நிலைய முனையங்கள் வழியாக 83.9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.

மேலும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் குறைந்தது 120 விமானங்கள் அந்த விமான நிலையத்திற்குள் நுழைய வானில் பறந்தன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த 150 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 29 பேரை பாதுகாப்பாக மீட்டனர். பாரிஸில் உள்ள கேட்விக், சார்லஸ் டி கோல் விமான நிலையம், அயர்லாந்தில் உள்ள ஷானன் விமான நிலையம் மற்றும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள விமான நிலையங்களுக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்க வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டதை ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளங்கள் சுட்டிக்காட்டியது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து முதலில் திருப்பி அனுப்பப்பட்ட சிங்கப்பூர், ஜோகன்னஸ்பர்க், லாகோஸ், கேப் டவுன் மற்றும் தோஹா உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த ஏழு விமானங்கள் கேட்விக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிலையம் திறக்கும் வரை பயணிகள் எக்காரணம் கொண்டும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகி்ன்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றும், அடுத்த சில தினங்களும் ஹீத்ரோ விமான நிலையம் வழியாக பயணிக்க வேண்டிய பயணிகள், நீங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரச்சினை சரிசெய்து விமான நிலையம் இயக்க நிலைக்கு வந்தாலும் அடுத்த சில தினங்களுக்கு விமான சேவைகள் சீராகும் வரையில் கட்டுபாடுகள் தொடரும் என்ற கூடுத‌ல் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஹேய்ஸில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 16,300க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Airport Close | Heathrow Airport | Power Outage

Add your comments to

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத் காவல்துறை அதிரடி நடவடிக்கையின் விளைவாக கடந்த வாரம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தொழிலாளியை கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டார்

Image: தொழிலாளி வண்டி ஏற்றி கொலை செய்யபட்ட இடம்

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத்தின் முட்லா பகுதியில் மொபைல் பக்காலாவில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தாமல் வாகனத்தில் கடக்க முற்பட்டபோது தடுக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் குவைத் குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இது தொடர்பான செய்தி கடந்த வாரம் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் வாசகர் பல படித்திருப்பீர்கள்.

நாட்டின் குற்றப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஹமீத் அல்-தவாஸ் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை நடத்தி விசாரணையில், ஒரே வாரத்தில் குற்றவாளி பிடிபட்டார். குற்றவாளி குவைத் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் பக்கலாவை(கடைகளை) குறிவைத்து கடந்த காலங்களில் இது போன்ற பல குற்றங்களைச் செய்திருப்பதும் விசாரணை யில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த குற்ற சம்பவங்களில் எதுவிலும் ஊழியர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை. பலருக்கும் காயத்தை இவர் ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி ஜஹ்ரா கவர்னரேட்டின் அல்-முட்லா பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி, உயிரிழந்த தொழிலாளி வேலை செய்யும் மொபைல் பக்காலாவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். இதையடுத்து கடையின் ஊழியர் குற்றவாளியை தடுத்து நிறுத்த வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் குற்றவாளி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஊழியர் வாகனத்தின் நடுவில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களும் தெரியவில்லை.

இதையடுத்து குற்றவாளி சில்வர் நிற நான்கு சக்கர வாகனத்தில் பக்காலாவில் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவானது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் 15 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுலைபியா பகுதியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் ஜஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இதுவரை செய்த குற்றங்கள் தொடர்பாக தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

Add your comments to

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி இனிமுதல் 5 வருடங்களாக இருக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : குவைத் ஓட்டுநர் உரிமத்தின் மாதிரி புகைப்படம்

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 425/2025 மற்றும் 76/1981 இன் கீழ் உள்ள பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட புதிய சட்டம் இன்று(23/03/25) ஞாயிறுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

புதிய சட்டத்தின்படி பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் மாறும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் புதிய சட்டப்படி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவரின் குடியிருப்பு அனுமதியின்(விசா காலவதியை) கால அளவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டினருக்கு இவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த சட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டு 5 வருடங்களாக காலவதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், குடிமக்களுக்கு 15 ஆண்டுகளும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(பிதூனி) தங்களுடைய அடையாள அட்டையின் காலாவதி அடிப்படையிலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும். மேலும் தற்போது ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait License | Indian Worker

Add your comments to

Tuesday, November 12, 2024

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது

Image : குவைத் அமீர்

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.

இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.

தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.

இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.

தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.

குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.

ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வ‌ளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait Emir | Indian Worker

Add your comments to

Sunday, November 10, 2024

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Image credit:இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தின் புகைப்படம்

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெண்கலயுகத்தில் தில்முன் கலாச்சாரத்திற்கு முந்தைய காலத்தில் அங்கிருந்ததாக நம்பப்படும் ஒரு கோவிலின் எச்சங்களை குவைத்தின் ஃபைலாகா தீவு பகுதியிலிருந்து டேனிஷ் தொல்பொருள் ஆய்வுக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

அரேபிய வளைகுடாவில், முக்கியமான கலாச்சார, வர்த்தகம் மற்றும் சமூக பாரம்பரியத்தை புதிய கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது. குவைத் தேசிய கலாச்சார, கலை மற்றும் இலக்கிய கவுன்சிலின்(என்.சி.சி.ஏ.எல்) உதவி பொதுச்செயலாளர் முஹம்மது பின் ரேடா ஒரு செய்திக்குறிப்பில் நேற்று(09/11/2024) சனிக்கிழமை மாலையில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Image: கோயிலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

ஃபைலாகா தீவில் அமைந்துள்ள பழமையான அரண்மனையின் கிழக்குப்பகுதியில் நடத்திய தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த கோயிலின் எச்சங்கள்(சிதைந்த பாகங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, மற்றொரு கோவிலின் எச்சங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்முன் என்பது கிருஸ்துவுக்கு முன்பு(கிமு)3 மில்லினியத்தில் இருந்து கிழக்கு அரேபியாவில் பண்டைய செமிடிக் மொழி பேசும் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

அவர்களின் மதம் மற்றும் பாரம்பரியமான பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதில் புதிய கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான செய்தியை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான குணாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Image: கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait News | Kuwait Temple

Add your comments to

Wednesday, October 2, 2024

சவுதியில் பயங்கரமான விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;20 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

சவுதியின் தம்மாமில் குடியிருப்பு கட்டிடத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதில் பயங்கரமான விபத்து

Image : பலத்த சேதமடைந்தன குடியிருப்பு

சவுதியில் பயங்கரமான விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;20 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

சவுதியின் தம்மாமில் குடியிருப்பு கட்டிடத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 20 பேர் வரையில் காயமடைந்தனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த செய்தியில் நேற்று(01/10/24) செவ்வாய்க்கிழமை காலை தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனை அருகே அல்நாகீல் பகுதியில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டது எனவும், குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த பயங்கரமான சிலிண்டர் வெடிப்பில் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்ததுடன், தீ மளமளவென பரவியது எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 20 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சுமார் 10 குழு தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் எனவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Fire Accident | Three Died

Add your comments to