BREAKING NEWS
latest

Tuesday, April 21, 2026

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது

Image : செய்தி பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது. குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாடு கடத்துவதாக மிரட்டி அவர்களிடம் இருந்து தொடர்சியாக பணம் பறித்து வந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 800 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் அல்-முவேலி தலைமையிலான அமர்வு இந்த அதிரடியான தீர்ப்பை நேற்றைய(20/04/26) தினம் வழங்கியது. தலைநகர மாகாணமான Al Asimah பகுதியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டன. மேலும் இந்தத் தீர்ப்பில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான ஒன்று நாட்டில் வேலையின் நிமித்தமாக தங்கியிருந்த பல வெளிநாட்டினரை மிரட்டி பணம் பறிப்பதாகும், இதற்கு இணங்காத,பலரை பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நாடு கடத்துவது இவர் வேலையாக செய்து வந்தார் என்பதாகும். அதேநேரம் இவருடைய பெயர் விபரங்கள், பதவி உள்ளிட்டவை தொடர்பான கூடுத‌ல் தகவல்கள் எதுவும் வெளியாகியுள்ள செய்தியில் வெளியிடவில்லை.

Kuwait Worker | Kuwait Police | Kuwait Jails

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

NEXT »