குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்
Image : செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி
குவைத் விமான நிலையம் செயல்பட தொடங்கியதாக வெளியான செய்தி ஆதாரமற்றவை
குவைத் சர்வதேச விமான நிலையம் விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இதற்கான பணிகள் முன்னேறி வருவதாக, குவைத் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டதாக பல சமூக வலைதளங்களில் இன்று(09/04/26) மதியம் முதல் செய்திகள் தீயாக பரவின. இதையடுத்து குவைத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாள அப்துல்லா அல்-ராஜ்ஹி இந்த செய்தியை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஒன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்கியதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, இன்று மாலையில் மற்றொரு குவைத் ஏர்வேஸ் விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விமான நிலையம் எந்த நேரத்திலும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்திருந்தன. இந்த தகவல்களையும் அதிகாரிகள் மறுத்துள்ளார்.
மேல் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் தவறானது என்று வலியுறுத்திய அல்-ராஜ்ஹி, இன்று இதுவரை எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களைச் சரிபார்த்து, நம்பகமற்ற இணையச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிராந்தியத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, குவைத் தனது வான்வெளியை மூடி, விமான நிலையச் செயல்பாடுகளை கடந்த பிப்ரவரி-28,2026 முதல் இடைநிறுத்தியது குறி்ப்பிடத்தக்கது.
Indian Worker | Kuwait Airport | Airport Reopen

