BREAKING NEWS
latest

Wednesday, October 27, 2021

குவைத்தில் ஒரே வாரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட 662 பேர் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி பிடிபடும் நபர்களை 3 நாட்களில் நாடுகடத்த உத்தரவு;கடந்த வாரத்தில் 662 பேர் நாடு கடத்தப்பட்டனர்

Image : காவல்துறை பரிசோதனை

குவைத்தில் ஒரே வாரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட 662 பேர் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் கடந்த ஒரே வாரத்தில் 662 பேர் நாடு கடத்தப்பட்டனர். இது அக்டோபர்-17,2021 முதல் நேற்று வரையிலான புள்ளிவிபரங்கள் ஆகும். சட்டவிரோதமாக தங்கியிருந்த உள்ளிட்ட காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர்களில் 447 பேர் ஆண்கள் மற்றும் 215 பேர் பெண்கள் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அலி சபாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புள்ளிவிவரங்களை உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும் உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஷேக் பைசல் அல்-நவாஃப் அல்-சபாவின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களை நாடு கடத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. குடியிருப்பு சட்டத்தை மீறியதாக பிடிபட்டவர்களை மூன்று நாட்களுக்குள் நாடு கடத்துமாறு உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த சில வாரங்களாக நடந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மையங்களில் உள்ள நபர்களின் வெளியேறும் முறைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பரிசோதனைகள் மீண்டும் துவங்கும் என்று தெரிகிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஒரே வாரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட 662 பேர் நாடு கடத்தப்பட்டனர்

« PREV
NEXT »