BREAKING NEWS
latest

Thursday, October 28, 2021

குவைத்தில் முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தைகளை எடுப்பவர்களுக்கு 250 தினார் அபராதம் விதிக்கப்படும்

குவைத்தில் கடற்கரையில் இருந்து முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தை போன்ற கடல் உயிரினங்களை எடுக்கும் நபர்களுக்கு 250 தினார் அபராதம் விதிக்கப்படும்

Image : குவைத் கடற்கரை

குவைத்தில் முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தைகளை எடுப்பவர்களுக்கு 250 தினார் அபராதம் விதிக்கப்படும்

குவைத்தின் கடற்கரையில் இருந்து முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தை போன்ற கடல் உயிரினங்களை சேகரிக்கும் நபர்களுக்கு 250 தினார்கள் அபராதம் விதிக்கப்படும் என நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது. இந்த உயிரினங்களின் சேகரிப்பு வழக்கமாக கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்துள்ள பல நபர்களால் சட்டவிரோதமாக செய்யப்படுகின்றது. முக்கியமாக நாட்டின் அஞ்சாஃபா, அல்பிடா, ஃபிண்டாஸ் மற்றும் அஷெரிஜ் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து திருட்டில் ஈடுபடுகின்றனர். இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி வணிக அடிப்படையில் இந்த திருட்டில் ஈடுபடுகின்றனர்.

மேலும் இவைகள் உணவகங்களிலும் விற்கப்படுகின்றன. மாலை பொழுதுகளில் பெரும்பாலும் இந்த செயல் பெரிய அளவில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன மற்றும் பல மீன்கள் மற்றும் பெரிய கடல்வாழ் உயிரினங்களுக்கு அடிப்படை உணவாக இது அமைந்துள்ளது.அதே நேரத்தில், இந்த உயிரினங்கள் கடல் பல்லுயிர் பெருக்கத்தின் மூலக்கல்லாக செயல்படுகின்றன. ஆறுகள், காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவனங்களில் வாழும் உயிரினங்களுடன் ஒப்பிடும்போது கடல் நத்தைகள் மிக முக்கியமான உயிரினங்களில் ஒன்றாகும்.

உலகில் 50,000 வகையான கடல் நத்தைகள் உயிர் வாழ்கின்றன. குவைத்திலுள்ள கடல்களிலும் இதில் நல்லதொரு எண்ணிக்கையிலான கடல் நத்தைகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த இனங்களின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியாது. அவை கடல் சூழலின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கை சாதனங்களாகவும் செயல்படுகின்றன. பெருங்கடல்களை பாதிக்கக்கூடிய மாசு, அவை ஏற்படும் நேரத்தில், இந்த சிறிய உயிரினங்களால் விஞ்ஞானிகளுக்கு எளிதாக அடையாளம் காணமுடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று குவைத் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர்.முஹம்மது மற்றும் வாலித் அல்-ஃபத்ல் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் முத்து சிப்பிகள் மற்றும் கடல் நத்தைகளை எடுப்பவர்களுக்கு 250 தினார் அபராதம் விதிக்கப்படும்

« PREV
NEXT »