BREAKING NEWS
latest

Friday, October 22, 2021

குவைத்தில் 20 நாட்களுக்கு மேலான தொழிலாளி ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குவைத்தின் Fahaheel யில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் சிதைந்த நிலையில் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டதாக தகவல்

Image : Kuwait Police

குவைத்தில் 20 நாட்களுக்கு மேலான தொழிலாளி ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குவைத்தின் Fahaheel பகுதியில் பழமையான கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் உள்ளே அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உடல் 20 நாட்களுக்கு மேல் பழமையானது என்பது தெரியவந்துள்ளனர்.

மேலும் இந்த உடல் ஆசியா நாட்டவருடையதாக இருக்கலாம் எனவும், ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் Fahaheel பகுதியில் ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்தில் 20 நாட்களுக்கு மேலாக அழுகிய நிலையில் இந்தியர் ஒருவர் இறந்து கிடந்தார் எனவும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அவர் உயிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 20 நாட்களுக்கு மேலான தொழிலாளி ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »