BREAKING NEWS
latest

Wednesday, September 8, 2021

குவைத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்துவந்த இந்திய செவிலியர் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்

குவைத்தில் இந்திய செவிலியர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணடைந்தார்

Image : உயிரிழந்த ஆஷா(வயது-42)

குவைத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்துவந்த இந்திய செவிலியர் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்

குவைத்தில் உள்ள Wara என்ற தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்துவந்த இந்தியா, கேரளா மாநிலம், கோட்டயம் ஆற்புக்கர பகுதியை சேர்ந்தவர் சிரியாக் இவருடைய மனைவி ஆஷா(வயது-42) புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று(08/09/21) காலையில் அவர் உயிரிழந்தார்.

இவருடைய கணவர் சிரியாக் ஆக்ஸிஸ் இன்டர்நேஷனல் என்ற கம்பெனியில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். மரணமடைந்த ஆஷாவின் உடலை தாயகம் எடுத்துச்செல்ல தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தம்பதிகளுக்கு ஜோயல் மற்றும் ஜுவல் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குவைத் அப்பாசியா United இந்தியன் பள்ளியில் 8 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் பயின்று வருகின்றனர்

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்துவந்த இந்திய செவிலியர் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்

« PREV
NEXT »