BREAKING NEWS
latest

Thursday, May 20, 2021

குவைத்தில் செவிலியராக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்தில் செவிலியராக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த செவிலியர்

குவைத்தில் செவிலியராக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

குவைத்தில் கோவிட் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இந்திய செவிலியர் ஒருவர் இன்று(20/05/21) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்த செவிலியர் இந்தியா,கேரளா மாநிலம்,செங்கனூர் பகுதியை சேர்ந்த ஆஷ்குமார்(வயது-37) என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த செவிலியர் கோவிட் பாதிப்பு காரணமாக ஜாபீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்ஸாக வேலை செய்து கொண்டிருந்தார். அவரது கணவர் பெயர் ஷியாம் குமார் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரேயா மற்றும் ஸ்ரேஷ்மா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் செவிலியராக வேலை செய்துவந்த இந்திய பெண்மணி கொரோனா காரணமாக உயிரிழந்தார்

« PREV
NEXT »