BREAKING NEWS
latest

Tuesday, May 18, 2021

குவைத்தில் இந்தியாவுக்கு உதவ நன்கொடை பிரச்சாரம் தொடங்கப்பட்டது

இந்தியாவுக்கு உதவுவதற்காக குவைத் சமூக நல அமைச்சகம் சார்பில் நன்கொடை பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது

Image : ஹனா அல் ஹஜாரி

குவைத்தில் இந்தியாவுக்கு உதவ நன்கொடை பிரச்சாரம் தொடங்கப்பட்டது

இந்தியாவில் நிலவியுள்ள தீவிரமாக கோவிட் பரவலின் பின்னணியில் நெருக்கடி எதிர்கொள்ளும் இந்திய மக்களுக்கு உதவ குவைத் சமூக நல அமைச்சகம் தலைமையில் நன்கொடை பிரச்சாரம்( Donation Campaign) தொடங்கப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை அமைச்சகத்தின் சமூக மேம்பாட்டு உதவி செயலாளர் ஹனா அல் ஹஜாரி அறிவித்தார்.இந்த பிரச்சார நடவடிக்கை வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்றார். இந்த நடவடிக்கை இந்திய மக்களுடன் குவைத்திற்கு உள்ள உறவு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவு,ஒற்றுமை மற்றும் நட்பையும் அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். இதுபோல் குவைத் ஏற்கனவே இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்தியாவுக்கு உதவ நன்கொடை பிரச்சாரம் தொடங்கப்பட்டது

« PREV
NEXT »