BREAKING NEWS
latest

Friday, May 7, 2021

குவைத்தில் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி எடுக்க மறுத்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார்

குவைத்தில் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி எடுக்க மறுத்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார்

குவைத்தில் உறவினரான மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி எடுக்க மறுத்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார்

குவைத்தில் கோவிட் தடுப்பூசி போட வேண்டாம் என்று உறவினரான மருத்துவரின் ஆலோசனையைத் தொடர்ந்து தடுப்பூசி எடுக்க மறுத்த இளைஞர் பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் 27-வயதான குவைத் குடிமகன் என்று குவைத்தில் பீரியண்டால்ட் அறுவை சிகிச்சை மற்றும் பல் கட்டமைப்பு நிபுணரான டாக்டர்.முனீரா பதர் புராஷித் ட்விட்டர் மூலம் இதை தெரிவித்துள்ளார்.

இறந்த இளைஞனுக்கு கோவிட் தொற்று வரும் வரை வேறு எந்தவிதமான நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார் எனவும், அவர் உறவினரான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொரோனாவுக்கு தடுப்பூசி போட மறுத்துவிட்டார், ஆனால் பின்னர் மனம் மாறி தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஒப்புக்கொண்டார், ஆனால் தடுப்பூசி எடுப்பதற்கு முன்பாக வைரஸ் பாதித்து உயிரிழந்தார் எனவும் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் புராஷித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி எடுக்க மறுத்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார்

« PREV
NEXT »