BREAKING NEWS
latest

Thursday, March 18, 2021

குவைத்தில் இன்று 3 இந்தியர்கள் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று 3 இந்தியர்கள் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது;இவர்கள் மூவருமே வெவ்வேறான காரணங்களால் உயிரிழந்தனர்

இப்ராஹிம், முஸ்தபா, ஜார்ஜ்குட்டி

குவைத்தில் இன்று 3 இந்தியர்கள் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் கேரளா மாநிலம் ரண்டதானி பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(வயது-50) இன்று மாரடைப்பால் இறந்தார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரமிலா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளது. இவருடைய உடலை குவைத்தில் நல்லடக்கம் செய்வதற்கான நடைமுறைகளை கே.எம்.சி.சி அமைப்பு செய்து வருகின்றது.

இதேபோல் கேரளா மாநிலம், கோழிக்கோடு, பலுசேரி, நாடுவண்ணூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா(வயது48) இன்று குவைத்தில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக ஃபர்வானியா மருத்துவமனை வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடலை திருப்பி தாயகம் அனுப்புவதற்கான நடைமுறைகள் கே.எம்.சி.சி அமைப்பு செய்து வருகின்றது.

மேலும் கேரளா மாநிலம் தெல்லியூர், மாலியெக்கல் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் குட்டி(வயது- 58) மரணமடைந்தார். உடல் நல்லடக்கம் பின்னர் நடைபெறும். நீண்ட காலமாக குவைத்தில் உள்ள M A. Kharafi Sons-யில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பெயர் ஷீபா,மகன் கிரன் குவைத்தில் உள்ளார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்று 3 இந்தியர்கள் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »