BREAKING NEWS
latest

Thursday, March 11, 2021

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்;வழக்கு தொடர்பாக தீர்ப்பு மார்ச்-17 அன்று அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Image : Kuwait Court

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குவைத்தில் தற்போது விதிக்கப்பட்ட பகுதிநேர ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அப்துல் ஹாதி தாக்கல் செய்த மனுவில், பல அமைப்புகள்,சலூன் கூட்டமைப்பு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்கம் ஆகியவை இதில் கட்சி சேர்ந்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் எந்த பலனும் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தாக்கல் செய்துள்ளன மனுவில் தெரிவித்தனர். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்ட நஷ்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் மனுதாரர்கள் தக்கல் செய்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு மார்ச்-17 அன்று அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நிறுத்தி வைப்பதற்கான மனுதாரர்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

« PREV
NEXT »