BREAKING NEWS
latest

Thursday, March 11, 2021

குவைத்தில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு;தாயகம் செல்லும் நபர்கள் உயர்வு

குவைத்தில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு;தாயகம் செல்லும் நபர்கள் சுமார் 3000 வரையில் என்று தகவலும் வெளியாகியுள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு;தாயகம் செல்லும் நபர்கள் உயர்வு

குவைத்துக்கு 400 முதல் 600 பேர் வரை மட்டுமே வருகை தருகின்ற சூழ்நிலையில் சுமார் 3,000 பேர் வரையில் வெளியேறி வருகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு குவைத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 400 முதல் 600 வரையில் என்ற நிலைக்கு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தடை விதிக்கப்பட்ட பிறகு குவைத் குடிமக்களைத் தவிர, அவர்களின் நெருங்கிய உறவினர்கள், வீட்டுப் பணியாளர்கள், இராஜந்திர பிரதிநிதிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் .ஆனால் நாட்டிற்கு வெளியே பயணிப்பவர்களின் எண்ணிக்கை 2,000 யில் இருந்து 3,000 வரையில் இருக்கும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு;தாயகம் செல்லும் நபர்கள் உயர்வு

« PREV
NEXT »