BREAKING NEWS
latest

Tuesday, March 16, 2021

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு பணிப்பெண் கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image credit: FBI

விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் விமான ஊழியர் முகக்கவசம் அணியுமாறு கேட்டதை அடுத்து இளைஞன் ஒருவர் தனது இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் இவ்வாறு தவறாக நடந்து கொண்டதாக 24 வயதான லாண்டன்-கிரேயர் என்ற இளைஞரை FBA அதாகாரிகள் கைது செய்துள்ளனர், பின்னர் அந்த இளைஞரை டென்வரில் உள்ள யு.எஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னர் விமான பணிப்பெண் லாண்டன்-கிரேயரிடம் முகக்கவசம் அணியுமாறு பலமுறை கேட்டுக்கொண்டார்,ஆனால் அவர் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தார் எனவும் இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முகக்கவசம் அணியுமாறு கேட்டு பணிப்பெண் லாண்டனை அணுகியபோது அந்த நபர் தனது இருக்கையில் சிறுநீர் கழிப்பதாக FBA ஒருவர் அதிகாரி கூறினார்.

இது தொடர்பாக லாண்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விமானத்தில் ஏறுவதற்கு சற்று முன்பு தான் அதிகமாக பீர் குடித்துவிட்டு வந்ததாகவும்,நான் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது எனவும்,எனவே விமானத்தில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். FBA சிறப்பு அதிகாரி மார்ட்டின் டேனியல் கூறுகையில், விமான ஊழியர்களை அலட்சியப்படுத்தியது மற்றும் சிறுநீர் கழித்தது உள்ளிடவை இளைஞருக்கு நிலவு இல்லை எனவும்,அந்த இளைஞன் 10,000 டாலர்கள் கட்டிவைத்த நிலையில் விடுவிக்கப்பட்டார் எனவும்,இந்த வழக்கு மார்ச்-26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 250,000 டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் வகையிலான குற்றமாகும் என்று அசோசியேட்டட் பிரஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to விமானத்தில் முகக்கவசம் அணியுமாறு கூறிய நிலையில்; இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்

« PREV
NEXT »