BREAKING NEWS
latest

Thursday, February 11, 2021

ஓமானுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் உச்சக்குழு அறிவிப்பு

ஓமானுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் உச்சக்குழு அறிவிப்பு:இதற்காக ஹோட்டல்களை சமூக நல அமைச்சகம் தேர்வு செய்துள்ளது

Image : Oman

ஓமானுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் உச்சக்குழு அறிவிப்பு

ஓமானுக்கு பிப்ரவரி 15 முதல் வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல்(Institutional Quarantine) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வந்தவுடன் ஹோட்டல்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும்,செலவை நீங்களே(பயணி) ஏற்க வேண்டும். இதற்காக மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள ஆறு ஹோட்டல்களை சமூக நல அமைச்சகம் தேர்வு செய்துள்ளது, வருகின்ற பயணிகள் இங்கே தங்கலாம்.

Image credit: Oman CCA Official

இது தவிர, முசந்தம், தோஃபர், புரைமி, அல் தகிலியா, வடக்கு ஷர்கியா, தெற்கு ஷர்கியா மற்றும் வடக்கு படீனா ஆகிய கவர்னரேட்டில் தனிமைப்படுத்தலுக்காக சிறப்பு ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித நல அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் அறைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.ஹோட்டல்கள் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் முன்பதிவு நடைமுறைகள் ஓமானின் விஎஸ் கோவிட் -19 தளத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமானுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் உச்சக்குழு அறிவிப்பு

« PREV
NEXT »