BREAKING NEWS
latest

Thursday, January 21, 2021

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது,மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் வைத்து இறந்துவிட்டார்

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது

குவைத்தில் ஒரு இளம் இந்திய பொறியியலாளர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி இன்று(21/01/21) வெளியாகியுள்ளது. இவர் இந்திய,கேரளா மாநிலம், திருவனந்தபுரம்,வர்கலா பகுதியில் உள்ள நஜீர் உசேன் மகனான இஷான் நசீர்(வயது-31) இன்று மாரடைப்பால் திடிரென உயிழந்தார். அவர் குவைத்தில் உள்ள HOT நிறுவனத்தின் சிவில் திட்டத்தில்,குவைத்தின் ஷர்க்(Sharq) பகுதியில் மதிப்பீட்டு பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலையில் வேலையின் போது அவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது, உடனடியாக ஆம்புலன்ஸ்யில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் வைத்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.இவரது மனைவி ஷஸ்னா-ஷா குவைத்தில் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட நடவடிக்கைகளுக்காக உடல் ஃபர்வானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இஷான் இதற்கு முன்பு NBTC கம்பெனியில் வேலை செய்து வந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Death | Today News | Kerala People

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது

« PREV
NEXT »