BREAKING NEWS
latest

Thursday, January 7, 2021

குவைத்தில் போதையில் இருந்த இந்தியரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்


குவைத்தின் பாதுகாப்பு துறையின் அவசரகால உதவி மையத்திற்கு ஒரு புகார் அழைப்பு வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவருடைய அழைப்பு பதிலளித்து, மது பாட்டில்களுடன் குடிபோதையில் இருந்த இந்தியரை கைது செய்தனர். இதையடுத்த அந்த இந்தியரை சட்ட நடவடிக்கை மற்றும் கூடுதல் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டார் என்று குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹவல்லி மாகாணத்திலுள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றில் தனது குத்தகைதாரர்(வாடகைக்கு) ஒருவர் தவறாக நடந்துகொள்வதாகவும், விசித்திரமான சில செயல்களை செய்வதாகவும் கூறினார் எனவும் அதன்படி, பாதுகாப்பு ரோந்துப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர் எனவும்,அசாதாரணமாக நடந்து கொண்டதால் இந்தியர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

இது இவருடன் நிற்கவில்லை எதற்காக வெளிநாடு வந்தோம் என்பதை மறந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆனால் போது..... இந்த கதை தொடர்கிறது. வளைகுடாவில் வெளிநாட்டினருக்கு எளிதாக சர்க்கரை வியாதி மற்றும் இரத்த அழுத்தம் வருவது சாதாரணமான ஒன்றும், அவர்கள் இதுபோன்ற கள்ளச்சாராயம் என்று கூறும்,இது அந்த அளவுக்கு கூட சுத்தம் இல்லே..... கள்ளச்சாராயம் கூட நல்லது தான்.... வளைகுடா நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான விற்கப்படும் இவைகள் விஷத்திற்கு சமம், இதை குடித்தே மேற்குறிப்பிட்ட சில நோய்கள் உள்ள பலபேர் தினமுமு உயிரிழக்கிறார்கள்.


 

Kuwait Police | Arrested indian | Drinking Alcohol
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் போதையில் இருந்த இந்தியரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்

« PREV
NEXT »