BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

குவைத்தில் இரண்டு தமிழர்களின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Dec-24,2020

குவைத்தின் வெவ்வேறான பகுதியில் வேலை செய்து வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மரணம் குறித்த துயரமான செய்தி இன்று வெளியாகியுள்ளது. 

இதில் ஒருவர் பெயர் முருகேசன் நல்லதம்பி தனியார் கம்பெனியின் கீழ் Security ஆக வேலை செய்துவந்த நிலையில் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இவர் இந்தியா தமிழகம்,ராமநாதபுரம் மாவட்டம், மேலகன்னிசேரி, முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறி்ப்பிடத்தக்கது. 

இன்னொரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமாக இவர் இந்த துயரமான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இவருடைய உடலை தாயகம் அனுப்புவதற்கான பணிகளை அவருடைய கம்பெனி நிர்வாகம் செய்து வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இரண்டு தமிழர்களின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »