BREAKING NEWS
latest

Sunday, November 8, 2020

குவைத் சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலை ஒப்பந்தம் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடிவு:

குவைத் சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலை ஒப்பந்தம் 3 வருடங்களுக்கு  ஒருமுறை புதுப்பிக்க முடிவு:



நவம்பர்-8,2020

குவைத்தில் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ்  நேரடியாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் வேலை ஒப்பந்த காலத்தை மூன்று ஆண்டுகளாக நீட்டிக்க சிவில் சர்வீஸ் கமிஷன் ஒப்புதல் அளித்தது. தற்போது இது ஒரு வருடத்திற்கு ஒருமுறை என்ற விகிதத்தில் புதுப்பித்தல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேல்குற்றிபிட்ட துறையில் வேலை செய்யும் நபர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்குமாறு சுகாதார அமைச்சகம் சிவில் சர்வீஸ் கமிஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு தற்போது  சிவில் சர்வீஸ் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது என்று குவைத்தின் பிரபல தினசரி பத்திரிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது ஒப்பந்தம் காலாவதியான நபர்களின்  விண்ணப்பங்கள் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாக சமர்ப்பிக்க ஆணையம் சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலை ஒப்பந்தம் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க முடிவு:

« PREV
NEXT »