BREAKING NEWS
latest

Friday, February 14, 2020

சவுதியில் இருந்து தன்னை மீட்குமாறு கோவை பெண் கோரிக்கை விடுத்துள்ளார்;மகன்,மருமகள் இறந்தும் தாயகம் அனுப்பவில்லை:


சவுதியில் இருந்து தன்னை மீட்குமாறு கோவை பெண் கோரிக்கை விடுத்துள்ளார்;மகன்,மருமகள் இறந்தும் தாயகம் அனுப்பவில்லை:


இந்திய தமிழகம் கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் என்ற பெண்மணி குடும்பத்தினர் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக சவுதியில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் அவரை கடுமையாக துன்புறுத்தல்  செய்வதாகவும் தன்னை எப்படியாவது மீட்குமாறும் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கோவையில் உள்ள அவருடைய மகனும் மருமகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தாயகம் செல்ல அனுமதி கேட்டும் வீட்டின் உரிமையாளர்( Sponsor) மறுத்துவிட்டார் எனவும், மேலும் தப்பித்து வெளியே செல்லாமல் இருக்க வீட்டின் உள்ளேயே அடைத்து வைத்து துன்புறுத்திய வருவதாகவும் அவருடைய கணவர் சக்திவேல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவியை எப்படியாவது மீட்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பழனியம்மாள் கூறுகையில் வீட்டின் கதவுகள் அனைத்தும் Finger System மூலமான நவீன பூட்டுகளை பயன்படுத்தி உள்ளனர் எனவும், அவர்கள் குடும்பத்தினர் யாராவது கைரேகை வைத்தால் மட்டுமே வெளியே வரமுடியும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ள ஆடியோவும்
வெளியாகியுள்ளது.
.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் இருந்து தன்னை மீட்குமாறு கோவை பெண் கோரிக்கை விடுத்துள்ளார்;மகன்,மருமகள் இறந்தும் தாயகம் அனுப்பவில்லை:

« PREV
NEXT »