BREAKING NEWS
latest

Sunday, November 10, 2019

குவைத்தில் Tiktok விபரீதம்; இந்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் Tiktok விபரீதம்; இந்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

குவைத்தில் இந்தியா ஆந்திரா இளைஞர் மோகன்குமார் (வயது-30) Tiktok யில் வெளியான வீடியோவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

குமாரின் நண்பர் வாடிதுர்கா ராவ் என்ற நபர்
2000 தினார்கள் திருடிவிட்டார் என்று குற்றம்சாட்டி தற்கொலை செய்த நபரின் புகைப்படம் இணைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Tiktok யில் வெளியிட்ட வீடியோவின் காரணமாக மனமுடைந்து, யாரும் இல்லாத நேரத்தில் குடியிருப்பின் உள்ளே உள்ள படிக்கட்டின் இரும்பு கம்பிகளாலான பாதுகாப்பு சுவற்றில் கயிற்றை கட்டி தூக்கிட்டு இந்த சோகமான முடிவை எடுத்தார் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஏலச்சீட்டு பணத்தை  திருப்பிகேட்டு, பணத்தை திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாடிதுர்கா, குமாரின் புகைப்படத்துடன் 2000 தினார்கள் திருடி விட்டதாக Tiktok-யில் பொய்யான பதிவை வெளியிட்டார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் அனுப்பும் பணிகளை குவைத் இந்திய தூதரகம் செய்து வருகின்றது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் Tiktok விபரீதம்; இந்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

« PREV
NEXT »