BREAKING NEWS
latest

Sunday, October 20, 2019

குவைத்தில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு வந்த தமிழக இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

குவைத்தில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு வந்த தமிழக இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்: 


குவைத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு இந்திய தமிழகம் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், பஷீர் அப்பாஸ் தெருவில் வசித்து வரும் ஜாபர்அலி என்பவரின் மகன் சதாம் உசேன்(வயது-23) வேலைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் திடிரென உடல்நிலை சரியில்லாமல் குவைத்தில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் கிச்சை பெற்றுவந்த சதாம் நேற்று சனிக்கிழமை(19/10/2019) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வேலைக்கு வந்து 23-வயது மட்டுமேயான தமிழ் இளைஞர் மரணமடைந்துள்ளது, குவைத்தில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு வந்த தமிழக இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்:

« PREV
NEXT »