BREAKING NEWS
latest

Friday, September 27, 2019

குவைத்தில் 1வயது முதல் 4 வயது வரையில் உள்ள பசுவை இறைச்சிக்கு பயன்படுத்தி தடை; பெண் ஆடு, பெண் ஒட்டகமும் இதில் அடங்கும்:

குவைத்தில் 1வயது முதல் 4 வயது வரையில் உள்ள பசுவை இறைச்சிக்கு பயன்படுத்தி தடை; பெண் ஆடு, பெண் ஒட்டகமும் இதில் அடங்கும்:

குவைத் வேளாண்மை மற்றும் மீன்வளத்திற்கான பொது துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 4 வயது வரையில் உள்ள பசுக்களை இறைச்சிக்காக கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பெண் ஆடு, பெண் ஒட்டகமும் இறைச்சிக்காக கொல்லவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இவைகளின் வளர்ச்சி விகிதம் குவைத்தில் வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சம்மந்தப்பட்ட துறை விளக்கமளித்துள்ளது.

நோய்கள், காயங்கள் மற்றும் சந்ததி உற்பத்தி இன்மை உள்ள மேல் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகளை கொல்வதற்கு இது புதிய உத்தரவு பிரச்சினையாக இருக்காது. இந்த புதிய உத்தரவு மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Reporting by Kuwait tamil pasanga Team


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 1வயது முதல் 4 வயது வரையில் உள்ள பசுவை இறைச்சிக்கு பயன்படுத்தி தடை; பெண் ஆடு, பெண் ஒட்டகமும் இதில் அடங்கும்:

« PREV
NEXT »