BREAKING NEWS
latest

Wednesday, August 7, 2019

குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் வாகன ஓட்டுநராக கடந்த சில வருடங்களாக பணிபுரிந்து வந்தவர்  பக்கிரிசாமி (வயது-56). அவர் கடந்த
19/05/2019 அன்று குவைத்தில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் சிக்கி படுகாயத்துடன் 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 06/08/2019 செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார். இவர் திருச்சி மாவட்டம், பொன்மலையை அடுத்த,தென்றல் நகரைச் சேர்ந்தவர். பக்கிரிசாமியின் தந்தை பெயர்
சண்முகம் என்பதாகும்.

3 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு குவைத் மக்கள் சேவைமையத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து நலம் விசாரித்து உதவிகளையும் செய்து வந்தனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்த பக்கிரிசாமியின் உடலை சட்ட நடவடிக்கைகள் முடித்து விரிவாக  தாயகம் அனுப்பும் வேலைகளை மக்கள் சேவை மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team

   
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »