BREAKING NEWS
latest

Wednesday, August 28, 2019

குவைத்தில் தேடப்பட்டு வந்த கடந்த இரண்டு நாட்களாக தேடப்பட்ட தமிழ் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் தேடப்பட்டு வந்த கடந்த இரண்டு நாட்களாக தேடப்பட்ட தமிழ் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் வேலை வந்த  இந்திய தமிழகம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, களப்பாரக்ரம் என்ற ஊரைச் சேர்ந்த அய்யப்பன்(வயது-32). இவருடைய தந்தை பெயர் மாரியப்பன்.

இவர் குவைத்தில் சவுதி எல்லைப்புற பகுதியானWafra பகுதியில் குவைத்தி( Sponsors)க்கு சொந்தமான காய்கறி தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19/08/2019 முதல்
இவருடைய குடும்பத்தினர் இவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அவருடைய குவைத்தில் உள்ள தம்பி மற்றும்  நண்பர் இவரை காணவில்லை என்று நேரடியாகவும், குவைத்தில் உள்ள சமூக வலைதளங்களில் மூலம் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று மதியம்  அவர் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தியே பதிலாக கிடைத்து.

இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றுசெய்திகள் தெரிவிக்கின்றன. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு  குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை காணவில்லை என்று குவைத் தமிழ் பசங்க தளத்தில் இயற்கனவே செய்தி பதிவு செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Reporting by Kuwait tamil pasanga Team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தேடப்பட்டு வந்த கடந்த இரண்டு நாட்களாக தேடப்பட்ட தமிழ் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »